ரேஷன் கார்டையும் கேன்னையும் கைல கொடுத்து மண்ணெண்ணெய் வாங்க அம்மாவின் கெஞ்சல் கட்டளை.. நானும் போனா போகட்டும்னு கிளம்பிட்டேன் (பொழுது போகாததன் காரணமேயன்றி வேறில்லை. ஆமிக்கு பொறுப்பு வந்துச்சுன்னு வரலாறு தப்பா கல்வெட்டுல செதுக்கிட கூடாது சொல்லிபுட்டேன்:-)

சின்ன வயசுல போனது. "அங்கேலாம் போனா நம்ம கௌவரம்(?) என்ன ஆகுறது????"ன்னு பேசுற ஸ்டேஜ்ல போகாமவிட்டு, ரொம்ப நாளைக்கு அப்பறம் இன்னைக்கு தான் போனேன். பெருசா எந்த மாற்றமும் இல்ல. அதே கியூ அதே விநியோகிப்பாளர்,அதே  பதிவாளர்...ஆங் அதே மொல்லமாரி தனம், அதே பிச்சைக்காரதனம்.... அதே திருட்டு தனம்..... எந்த மாற்றமும் இல்ல!!!! ( கட்சி தாவல் தடை சட்டம் மாதிரி குணம் மாறுவதற்கு தடை சட்டம்ங்குறத எல் ஐ சி பாலிஸியா வச்சுருப்பாங்களோ?

கிட்டதட்ட ஒரு மணி நேரம் வியர்வையிலும்,நெரிசலிலும், அநாகரிக ஊர் வம்பு பேச்சுக்களுக்கு மத்தியிலும்  நிற்பது உலக மகா வேதனை!! எப்படியோ 1 மணிநேரத்துக்கு பிறகாவது என் முறை வந்துச்சு.ரேஷன் கார்ட்ல பதிஞ்சதுக்கு பிறகு 43 ரூபாய்க்கான சீட்டு கொடுத்துட்டு 50 ரூபாய் கேட்டார். இதுக்கு தான் மொல்லமாரிதனம்னு பேர் வச்சது. 4 ரூபாய்  சோப்பு கொடுத்துட்டு 7 ரூபாய்ன்னு நமக்கிட்ட கணக்கு காமிச்சார்.. சரி பிச்சைக்காரன் வாசல்ல வந்தா ஒரு ரூபாய் போட்டு அனுப்புறதில்லையா? அதே மாதிரி அங்கியிருந்த 3 எருமைகளுக்கும் ஒருரூபாய் வீதம் பிச்சைகாசு போட்டுட்டு வந்தாச்சு (சாரிங்க எருமை சார்.... இந்த ஜடங்களுக்கு உங்க பேரை வச்சதுக்கு)

அப்பறம் மண்ணெண்ணெய் ஊத்துற  இடம். அங்கேயும் அதே நீண்ண்ண்ண்ண்ண்ட க்யூ :-(
தெரிஞ்சவர்கிட்ட போன்ல மொக்கை போட்டுட்டே ஸ்லோவா வேல செஞ்சுட்டு இருந்ததுனால கூட்டம் கூடிடுச்சு. வீடு கட்டுறாராம்..... பேச்சுக்கள் சிமெண்ட்,செங்கல்,கம்பி விலையின் ஏற்றம், வைகை ஆத்து மணல் அள்ளுவதில் கெடுபிடி பற்றியிருந்ததால் நமக்கு தேவையில்லாத மேட்டர்ன்னு கண்டுக்காம விட முடியல (அதெல்லாம் வச்சு ஒரு பதிவு தேத்தலாம்னு தான்;-) இங்கே தான் அவரின் பிச்சைக்காரதனம் தெரிய வந்துச்சு. "எத்தன லிட்டர்மா"ன்னு கேட்டுட்டே இருக்கும் போது கீழே வைத்திருக்கும் ட்ரம்மில் 100 மில்லி மண்ணெணெய் விடப்பட்டது. (சொட்டுற மண்ணெண்ணெய் அதுல வடியுறதுக்காக விட்டு வைக்கிறாராம். ஆனா அதுக்கு சின்ன பாத்திரம் போதும்ல?!!!. அண்டா எதுக்குன்னு கேட்க யாருக்கும் தைரியம் இல்ல :-( அப்பறம் இன்னொரு கொடுமை பாய்ன்ட்  0 வில்  சரியாக முடிப்பதற்கு முன்பே ஊற்றுவது நிறுத்துனார்.

முதல் முறை நா கவனிக்கும் போது சாதாரணமாக தான் நெனச்சேன். மறுபடியும் அடுத்தடுத்த முறையும் தொடர்ந்துச்சு. யாரும் கவனிக்கலையா என்ன? ஏன் இந்த எழவுலாம் நம்ம கண்ணுக்கு மட்டும் படுது? :-( கேட்காமல் இருக்க முடியல. கேட்டுட்டா அடுத்த முறை பல அலைகழிப்புக்கு பிறகு தான் மண்ணெண்ணெய் கிடைக்கும். நாம போய்டுவோம். அப்பறம் அம்மா தானே கஷ்ட்டப்படணும். கேட்டுட்டாலும் பக்கத்தில் நிற்பவர்கள் சப்போர்ட் பண்ணாம "உனக்கென்ன வந்துச்சு"ன்னு சொல்லிட்டா அவமானமா இருக்குமே. அப்படியும் என்னை சப்போர்ட் பண்ணாம என்னையே கேள்வி கேட்டா "உனக்கு வேணும்னா கம்மியா வாங்கிக்கோ. எனக்கு கரேக்ட்டா 3 லிட்டர் வேணும்"னு சொல்லிடலாமா?. அப்படி சொல்லிட்டு வெளியே போனா உயிருக்கு உத்திரவாதம்?னு மனசுக்குள்ள 2 ஆமிக்கள் வக்கில் மாதிரி சண்ட போட்டுட்டு இருந்துச்சுங்க.
எனக்கு முன் ஒரே ஒரு நபர் தான். என்ன செய்ய? நம் முறை வந்தா நாலு வார்த்த நமக்கு தெரிஞ்ச ரூல்ஸ் பேசலாமா? இல்ல கம்முன்னு கொடுக்குறத வாங்கிட்டு போலாமா?ன்னு யோசிச்சுட்டு இருக்கும் போதே  எனக்கு முன் இருந்த நபர் கேனை வைத்ததும் அண்ணே..............ன்னு அலறுனார். 2 ஆமிக்களும் பயந்து ஒளிஞ்ச்சு பயத்துல. என்ன நடக்குது? எதுக்கு இப்படி கத்துறான்? ஒரு வேள நம்ம மூஞ்ச பாத்துட்டானோ????? :-)

"மெஷினை refresh பண்ணி சரியா போடுங்கண்ணே... நீங்க போன்ல பேசிட்டே கவனிக்காம கீழே விட்டுட்டீங்க போல.அதான் சரியா 0 பாய்ண்ட்'அ மெஷின் காட்டாம 0.1ல காட்டுதுண்ணே"ன்னு பவ்யமாக பேசிய பிறகு "ஓ....கவனிக்கலடா தம்பி.....இதோ ஊத்துறேன்"ன்னு தன் குட்டு வெளிபட்டதை மறைக்க வழிஞ்சிட்டே   0 பாய்ன்ட்ல ஆரம்பிச்சு சரியா 3.0 பாய்ன்ட்லையே முடிச்சார்.

சிரிச்ச முகத்துடன் "இப்ப ஓக்கே.....நன்றிங்கண்ணே... அடுத்து வரவங்களுக்கும் அப்படியே ஊத்துங்கண்ணே... பாவம்!!! எத்தன தடவ தான் நீங்களும் கவனிக்காமலே இருக்க போறீங்க? நீங்க வீடு இல்ல... பங்க்ளாவே கட்டலாம்ணே"னு சொன்னதும்  விநியோகிப்பாளரின் சிரித்த முகம் சிவந்து சினத்தோட பார்த்தார் (அப்பவும் அவமானமா இல்ல அவருக்கு) நான் கூட இப்படிலாம் கேட்டுருக்க மாட்டேன்...... என்னா சாமர்த்தியம்? என்னா சாமர்த்தியம்? கண்டிப்பா அந்த நபர் சொன்ன வார்த்தை செருப்பால் அடித்தது போல் இருந்துருக்கும் அவருக்கு.

இவன் அப்பன் வீட்டு சொத்துல பாதிய தா அப்படின்னா கேட்டார் அந்த நபர்? கொடுத்த காசுக்கு 3 லிட்டர் குறையாம கொடுக்க இவனுங்களுக்கெல்லாம் வலிக்குதாம். என்ன கொடுமை டா இது???? என்ன பொழப்புடா இது???? ஒரு ஆள்கிட்ட 200 மில்லி கொள்ளையடிச்சா 3000 ரேஷன்கார்ட்க்கு என்ன ஆச்சு? ஒரு லிட்டர்க்கு மானியம் போக அரசு 12 ரூபாய்க்கு விற்றாலும் கூட இவர்கள் அதனை வெளியே கள்ளச்சந்தையில் 40 ரூபாய்க்கு விற்பதாக விஷாரிக்கும் போது தெரிஞ்சுகிட்டேன். உண்மை தான்.... மொதல்ல இவனுங்க சுவிஸ்ல எத்தன கோடி போட்டு வச்சுருக்காங்கன்னு விஷாரிக்க சொல்லோணும் ஹி..ஹி..ஹி....

தொழில் தர்மம்
  • 2மாசம் தொடர்ந்து அரிசி மண்ணெண்ணெய் வாங்கலன்னாலே தாலுகா ஆபிஸ்,நகராட்சின்னு அலைய விடுவாங்க.
  • ஒரு நபர் ஒரு ரேஷன் கார்ட் தான் கொடுக்கணும்(பக்கத்து வீட்டுக்கு உதவிக்கு கொண்டு வந்தாலும் ஒத்துக்கப்படா)
  • ஒவ்வொரு வார்டுக்கும் ஒதுக்கப்பட்ட நாட்களில் தான் பொருட்கள் வழங்கப்படும். நெடு தூரத்திலிருந்தோ அல்லது படிப்பறிவு இல்லாத வயதானவர்களோ வந்தாலும் கூட பச்சாதாபம் இருக்காது.
  • அவங்க கொடுக்குற சோப்பு,சீப்பு,கண்ணாடி வகைறாக்களுக்கு தகுந்தபடி காசு கொடுக்கணும்.இல்லைன்னா ரேஷன் கார்ட் கொடுக்காம "போய் எங்கேயாவது வாங்கிட்டு வாங்கன்னு"பிச்சைகார ஆசாமிகள் நம்மள பிச்ச கேட்க சொல்லுவானுங்க.
  • அங்குள்ள புகார் பெட்டியில் யாரும் முன் வந்து புகார் கடிதம் அளிப்பதில்லை. போட்டாலும் திருடன் கைல சாவி இருக்கும் போது அவனே மேலதிகாரிட்ட கொடுப்பானா?
  • முதல் மாதம் பொருட்கள் வாங்க வராத ரேஷன் கார்ட்களையெல்லாம் கணக்கு பண்ணி வாங்கிவிட்டதாக ரிஜிஸ்ட்டர் பண்ணிடுவாங்க.
  • மத்த திருட்டு தனங்கள் நான் சொல்லி தெரியவேண்டிய அவசியமில்லை. அதான் டெய்லி பாக்குறோமே....
  • மண்ணெண்ணெய் ஊற்றும் இடமும் அத்தியாவசிய பொருட்கள் இருக்கும் இடமும் தனிதனியே தான் இருக்கும். அப்படியெனில் மண்ணெண்ணெய் கடையில் பொட்டி பொட்டியாய் மளிகை சாமான்கள் வச்சு தைரியமா கட்டாய விற்பனை செய்றது ஆச்சர்யம் தான். தலைமை அதிகாரிகளும் கண்காணிப்பு அதிகாரிகளும் ஒத்து போவதால் தானே இத்தன காலமும் தொடர்ந்து இந்த செயல்களை செய்றாங்க.......
 அம்மாவிடம் சொன்ன போது "இதுவே பரவால்ல. இப்பவாவது மெஷின் வந்துருக்கு. அப்பலாம் ஒரு டப்பாவுல அளந்து ஊத்துவாங்க. அதில உள்ள துளை வழியா பாதி போய்டும். இல்லைன்னா டப்பாவ நெழிச்சு வச்சுருப்பாங்க. அதுனால தான் அதுக்கு இது தேவலன்னு யாரும் தட்டி கேட்குறது இல்ல. கேட்டாலும் அடுத்த தடவ எதாவது காரணம் சொல்லி நம்ம ரேஷன் கார்ட் போலின்னு வாங்கி வச்சுடுவாங்க"ன்னு சொன்னாங்க. (கஷ்ட்ட காலம் :-(

நிலத்த அபகரிச்ச தனி மனிதனை தேடி தேடி கைது பண்ற அரசு, ஒட்டுமொத்த ஊர்மக்களையே ஏமாற்றும் இத்தகைய கருப்பு ஆடுகளை விட்டு வைப்பது ரொம்பவே வருத்தமா இருக்கு.
வசூல் ராஜாக்களா..............!!!!!!!!!! இனியாவது திருந்துங்கப்பூ..........

,

70 comments:

  1. "இது கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா"
    திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"
    என்ற பழைய பாடல் வரிகள் தான் நியாயபகத்திற்கு வருகிறது.

    ReplyDelete
  2. ரொம்ப நாளைக்கு பிறகு போனதால் கொந்தளிச்சு போயிட்டிங்க.. வழக்கமாக போகிறவர்கள் இந்த கொடுமைகளை எல்லாம் சகித்து கொள்ள பழகிவிட்டதாகவே தோணுகிறது.

    ReplyDelete
  3. சின்ன வயதில் ரேஷன் கடைக்கு போனது ஞாபகம் வருது...
    இவங்க இன்னும் திருந்தவே மாட்டாஅஙக் போல

    ReplyDelete
  4. எத்தனாவது பங்களாவோ??

    ReplyDelete
  5. அதே கியூ அதே விநியோகிப்பாளர்,அதே பதிவாளர்...ஆங் அதே மொல்லமாரி தனம், அதே பிச்சைக்காரதனம்.... அதே திருட்டு தனம்..... எந்த மாற்றமும் இல்ல!!!! // அட..அட.. என்னமா திட்றீங்க...

    ReplyDelete
  6. இது டெய்லி பாக்குரதுதானே?

    ReplyDelete
  7. ஆமி ரேஷன்கடை அனுபவம் எல்லாமெ
    சரியாதான் சொன்னிங்க. அந்தரேஷன்கார்டு படுத்தரபாடு பத்தி சொல்லாம விட்டுட்டிங்களே.6மாசத்துக்கு
    ஒருமுறை அந்தக்கார்டுக்கு புதுசு புதுசா
    என்னன்னமோ ஃபார்ம்லாம் ஃபில் பண்ண் சொல்வாங்க. அதுக்கு நால்பூரா க்யூவில
    நிக்கனும். அப்புரம் ஓனரோட போட்டோ
    ஒட்டனும்னும்பாங்க. இங்கல்லாம் இதுவரை போட்டோ ஒட்டு கார்ட் இல்லே.அதுக்கு அலையோ அலைய விடுவாங்க, எல்லாம் அனுபவம்தான்.

    ReplyDelete
  8. இவனுங்க திருந்தவே மாட்டானுங்க. எங்க ஊரில் இதேபோல ஒரு தடவை நடந்தது. அவங்கிட்ட சண்டை போட்டுட்டு வந்துட்டேன். அவன் குடும்பமே இந்த திருட்டு காசுல தான் வாழுதுன்னா பாத்துக்குங்களேன்.

    ReplyDelete
  9. இவன் அப்பன் வீட்டு சொத்துல பாதிய தா அப்படின்னா கேட்டார் அந்த நபர்? கொடுத்த காசுக்கு 3 லிட்டர் குறையாம கொடுக்க இவனுங்களுக்கெல்லாம் வலிக்குதாம். என்ன கொடுமை டா இது???? என்ன பொழப்புடா இது???? ஒரு ஆள்கிட்ட 200 மில்லி கொள்ளையடிச்சா 3000 ரேஷன்கார்ட்க்கு என்ன ஆச்சு? ஒரு லிட்டர்க்கு மானியம் போக அரசு 12 ரூபாய்க்கு விற்றாலும் கூட இவர்கள் அதனை வெளியே கள்ளச்சந்தையில் 40 ரூபாய்க்கு விற்பதாக விஷாரிக்கும் போது தெரிஞ்சுகிட்டேன். உண்மை தான்.... மொதல்ல இவனுங்க சுவிஸ்ல எத்தன கோடி போட்டு வச்சுருக்காங்கன்னு விஷாரிக்க சொல்லோணும் ஹி..ஹி..ஹி....


    ......உண்மையிலேயே விசாரணை கமிஷன் வைக்க சொல்லணும்ங்க.

    ReplyDelete
  10. அங்குள்ள புகார் பெட்டியில் யாரும் முன் வந்து புகார் கடிதம் அளிப்பதில்லை. போட்டாலும் திருடன் கைல சாவி இருக்கும் போது அவனே மேலதிகாரிட்ட கொடுப்பானா?


    ..... மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று அவர்களை உணர வைக்கும் நேரம் இது.

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி!

    நானும் சின்ன வயசுல (இப்ப பெரிய வயசான்னுலாம் கேட்கப்பிடாது!)ரேசன்கடைக்கு பல மாசமா போயிருக்கேன். ஒவ்வொரு தடவையும் அவங்க செய்யுற மொள்ளமாரித்தனங்களை பார்க்கும் போது, ஓங்கி பளார்னு அறையலாம்னு தோணும். ஆனா அந்த அளவுக்கெல்லாம் தைரியம் கிடையாது. :( :( :(

    மண்ணெண்ணெய், சீனி இப்படி எல்லாத்துலையும் Recession தான். அப்போதெல்லாம், எனக்கு ரேஷன்கடை ஜோக் தான் நினைவுக்கு வரும்..

    //இதுவே பரவால்ல. இப்பவாவது மெஷின் வந்துருக்கு. //

    இப்ப மட்டும் என்னவாம்? எங்க ஊர்ல எடை சரியா கொடுக்கணும்னு எலெக்ட்ரானிக் தராசு வச்சாங்க.. ஆனா அவங்க அந்த DISPLAY-வை நமக்கு தெரியாதவாறு திருப்பி வச்சிட்டாங்க.. யாரும் கேக்குறது இல்ல. கேட்டா நமக்கு இன்னும் குறைச்சிடுவாங்கலோன்னு பயம்..

    என்ன செய்ய....?

    தெரில. அதனால ஓட்டு போட்டுட்டு கெளம்புறேன்...

    :) :) :)

    ReplyDelete
  12. இவனுங்களை திருந்த ரமணா குரூப் கிட்ட சொல்லிடலாம் ..

    ReplyDelete
  13. ஸலாம் சகோ..

    ”திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...”

    இந்த கதைய படிச்ச ஒடன டக்குன்னு மனசுல தோனின கவிதை...நல்லா இருக்குல்ல..

    போகட்டும் யார்கிட்டையும் சொல்லிக்காதீங்க..

    ரேஷன் கடைக்கெல்லா போய் ரெம்ப நாள் ஆச்சு..நாம கொஞ்சம் காலேஜ் அதுஇதுன்னு போக ஆரம்ச்ச ஒடனையே..தம்பின்னு ஒருத்தன் எதுக்கு இருக்கான்...

    “டேய் பொருப்பில்ல..வீட்டுக்கு நாளு வேலை செய்ரதில்ல..நாளைல இருந்து நீதா இதெல்லா செய்யனும்!அப்டீன்னு,பொருப்பா பொருப்ப தலைல கட்டீர்ரது...

    அது ஒரு கனா காலம்! ஹ்ம்ம்..

    எல்லாத்துக்கும் கவுண்ட்டர் எழுதிட்டு இருக்காதீக..அண்ணன் வெளியூர் போறேன்,,வர..ம்ம்...ஆ,,10 நாள் ஆகும்,,,(இப்போ கொஞ்சம் உக்கிரம் கம்மிய்யா பதில் வரலாம்..:)

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  14. அதே கியூ அதே விநியோகிப்பாளர்,அதே பதிவாளர்...ஆங் அதே மொல்லமாரி தனம், அதே பிச்சைக்காரதனம்.... அதே திருட்டு தனம்..... எந்த மாற்றமும் இல்ல!!!!

    கொஞ்ச வருஷமா வீடியோ காமெரா..செல் காமெரா சகிதமா மக்கள் மிரட்டினப்போ கொஞ்சம் அடக்கி வாசிச்சானுங்கோ..இப்பம் மறுபடியும் ...

    ReplyDelete
  15. முக்கியமான பதிவு.மக்கள் எதிர்த்துக்கேட்டாலே பெரும்பாலும் சரியாகிவிடும்.ஆனால் பழகி விட்டார்கள்.

    ReplyDelete
  16. ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா.... இவ்ளோ பிரச்சனைகளா... வீடு இல்ல பங்களாவே கட்டலாம் அண்ணே... சூப்பராகச் சொல்லிட்டார்:)).

    ReplyDelete
  17. //அங்கேலாம் போனா நம்ம கௌவரம்(?) என்ன ஆகுறது????//

    நானும் இதை நினைத்தது உண்டு....

    இவிங்க அடிக்கிற கொள்ளை எல்லாம் பட்டியல் போட்டு உள்ளது அருமை அக்கா..

    உங்க ஊர்ல மெஷின்... இன்னும் எங்க ஊர்ல லிட்டர் தான் எவ்ளோ கொள்ளை. ஆனா மற்றவை அளக்க மெஷின் வந்துடுச்சு. கொஞ்சம் பரவாயில்லை.

    ஆனால் என் அப்பா இந்த விஷயத்தை கேட்டே விட்டார் ஒரு முறை. அடுத்த முறையில் இருந்து எங்களுக்கு ஒழுங்காக வரும்.

    ReplyDelete
  18. விமான டிக்கெட் ரயில் டிக்கெட் பஸ் டிக்கெட் எல்லாம் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே கனினி மூலம் வாங்கிடலாம் அட ஏன் கரண்ட் பில்லு டெலிஃபோன் பில்லு சொத்து வரி சோக வரிகூட ஆன்லைனில் கட்டி விடலாம்.

    இந்த ரேஷன் கடை பொழப்பு இருக்கே...

    அதுக்கு பெசாமல் பட்டினி கிடந்திடலாம்.

    இன்றைய அடிப்படை வசதிகளில் சாமனியர்களும் அன்றாடம் நாடுவது ரேசன் கடையைத்தான் காரணம் இன்றைய விலைவாசியின் கொடூரமும் ஆட்சியாளர்களின் அலட்சியமும் மாதந்திரம் இருபாதியிரம் சம்பாதிக்கும் நடுதர வர்க்க குடும்பத்தினரே போராடித்தான் வாழ்கிறார்கள்.

    இச்சூழ் நிலையில் ரேசன் கடையில் பனியாற்றும் ஊழியர்கள் அடிக்கும் கொள்ளையை தட்டிக் கேட்ப்பதில் யாரும் அலட்சியமாகவோ அல்லது போனால் போகட்டுமே என்று இருந்து விட கூடாது.

    அது நமக்காக வழங்கப்பட்ட சழுகை நாம் அன்றாடம் கட்டும் வரியிலிருந்து அரசு ஒரு பங்கை நமக்கு அளிக்கின்றது அதற்க்கு குந்தகம் விலைவிக்கும் வன்னமாக யார் நடந்தாலும் அவரை சட்டத்தில் முன் கொண்டு செல்லுவதுதான் ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும்.

    சட்டம் அத்தீயவர்களை தண்டிக்காவிட்டால் பொதுமக்கள்கள் ஒன்று கூடி தர்ம அடி அடித்தாலும் சட்டமோ சட்டத்தை காக்கும் உயர் மட்டமோ உங்களை ஒன்றும் செய்து விடமுடியாது.

    நல்லதொரு பதிவு சமுதாயம் விழிப்புனர்விற்கு இது ஒரு அத்தாட்சி.

    கீப்பிட் அப்.

    ReplyDelete
  19. விழிப்புணர்வூட்டும் பதிவு!ஏழை சொல் அம்பலம் ஏறுமா?"அம்மா"காதில் இதுவெல்லாம் விழாமலா இருக்கும்?

    ReplyDelete
  20. ஐயோ அந்த கொடுமைய ஏங்கேக்குறீங்க... திட்டம் போடாமலே திருடர கூட்டம் இது... ஒன்னும் பண்ண முடியாது... இந்தியனும் அந்நியனும் வந்தாதான் நியாயம் புறக்குமோ என்னமோ...அதை விட கொடுமை என்னன்னா... எப்ப ரேசன் கடை தொறக்குராங்கன்னே தெரியாது.... இவிங்க எப்பவுமே இப்படித்தான் நாமளும் ஓட்டு போட்டுட்டு கிளம்புவோம்

    ReplyDelete
  21. சகோ.....காலம் காலமாக நடந்து வரும் கொடுமை....நாங்கள் இருந்த இடத்தில் இது தொடர்ந்து வந்ததால் மக்களை கூட்டி(!) இவர்களை துவைத்து எடுத்தோம்...அடுத்து எவன் வந்தாலும் இதை தொடர்நதோம்.....சரியான அளவையே மக்கள் கொண்டு சென்றனர்....ஆனால் அதை செய்ய வைத்த எங்களை தீவட்டிகள் என்று இந்த உலகம் பெயர் கொடுத்தது மறக்க இயலாதது.....என்ன செய்ய தானும் ஞாயத்தை கேற்க மாட்டான்....அடுத்தவன் கேட்டாலும் உடன் வரமாட்டான் மனிதன்....இதுக்கு பெரும் மொள்ள மாரித்தனம் தான்....கூட்டமா இருக்கும் மக்கள் சிந்தித்தால் தான் வழி கிடைக்கும்....யார் முதல் தீக்குச்சி என்பதே கேள்வி!

    ReplyDelete
  22. சமூக பிரச்சினையொன்றை அலசியிருக்கிங்க நல்ல விஷயம்

    //நிலத்த அபகரிச்ச தனி மனிதனை தேடி தேடி கைது பண்ற அரசு, ஒட்டுமொத்த ஊர்மக்களையே ஏமாற்றும் இத்தகைய கருப்பு ஆடுகளை விட்டு வைப்பது ரொம்பவே வருத்தமா இருக்கு//

    ஹ்ம்ம்ம்

    ReplyDelete
  23. தினமும் நடந்திட்டிருக்கிற பகல்கொள்ளை எல்லாவற்றையும் இப்படிப் பட்டென்று போட்டுக்கொடுத்திட்டிங்களே? இனி அவங்க புழைப்பு என்னாகிறது ரொம்பவும்தான் நொந்துபோயிடமாட்டானுக!

    ReplyDelete
  24. அஸ்ஸலாமு அழைக்கும்

    ஆமினா சமூக பிரச்சனையில் இறங்கியாச்சே என்ன விஷயம்...
    பாராட்டுக்கள்.நம்ம அந்த பக்கமே போறதில்லை.ஒன்னும் சொல்றதுக்கு
    இல்லை.

    ReplyDelete
  25. //
    பாரத்... பாரதி... said... 1

    "இது கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா"
    திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"
    என்ற பழைய பாடல் வரிகள் தான் நியாயபகத்திற்கு வருகிறது.

    //

    உண்மைதான்

    ReplyDelete
  26. அதே கியூ அதே விநியோகிப்பாளர்,அதே பதிவாளர்...ஆங் அதே மொல்லமாரி தனம், அதே பிச்சைக்காரதனம்.... அதே திருட்டு தனம்..... எந்த மாற்றமும் இல்ல!!!! //

    ஆனா உங்க வலைத்தளத்தில ஒரு பிச்சக்காறி இணைசிற்ரோமில்ல
    ஓட்டும்போட்டு பின்தொடர்வோர் எண்ணிக்கையைக் கூட்டினா
    சும்மாவா.நீங்க நல்லவங்க நிட்சயம் எங்க கடைக்கு வருவீங்க
    கொள்முதல் செய்வீங்க எண்டுதான் நினைக்குறம் சகோ .
    கொவப்படாதிருங்கள் காலம் மாறும் மாறும்போது நிட்சம்
    இந்தக் கஸ்ரம் தீரும் .(அட இந்தத் திட்டு திட்டுறாங்களே யாருக்காச்சும்
    உறைக்குதா ஐயா........)நன்றி சகோ பகிர்வுக்கு .

    ReplyDelete
  27. //வரலாறு தப்பா கல்வெட்டுல செதுக்கிட கூடாது சொல்லிபுட்டேன்//

    வரலாறு கிட்ட சொல்றதை விட உளி அடிப்பவரிடம் சொல்லி இருக்கலாம்..

    ReplyDelete
  28. ரேஷன் கடை அநியாயங்களை தட்டி கேட்க ரஜினி, விஜயகாந்த் போன்ற சகோதரர்கள் இருக்கிறார்களே..அவர்களுக்கு போன் செய்து இருக்கலாம்.

    ReplyDelete
  29. உபயோகமான பதிவை எழுதியமைக்கு நன்றி சிஸ்டர்!!

    ReplyDelete
  30. தற்சமயம் நடக்கும் சம்பவங்களுக்கு அவசியமான பதிவு!வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  31. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. பணத்தினைக் கட்டுக் கட்டாகப் பதுக்கி வைத்துக் கொண்டு,
    மக்களைக் கஷ்டப்படுத்தும் அரசியல்வாதிகள் மீது தான் இப் பதிவினைப் படிக்கையில் கோபம் வருகிறது.

    சமூகத்தில் இடம் பெறும் அவலத்தினைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறீங்க.

    ReplyDelete
  33. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    நிறைய விபரங்களோடு...
    அருமையான விழிப்புணர்வூட்டும் பதிவு சகோ.ஆமினா.

    ஒரு கலக்கு கலக்கிட்டீங்க சகோ.

    //நான் கூட இப்படிலாம் கேட்டுருக்க மாட்டேன்...... என்னா சாமர்த்தியம்? என்னா சாமர்த்தியம்? கண்டிப்பா அந்த நபர் சொன்ன வார்த்தை செருப்பால் அடித்தது போல் இருந்துருக்கும் அவருக்கு.//

    ஒரு கலக்கு கலக்கிட்டீங்க சகோ.

    முந்தைய பதிவில் ஜவுளிக்கடையிலே பேசின பேச்சில் ஒரு சதவீதம் கூட இங்கே பேசாமலேயே சாதித்து வெற்றி ஈட்டிவிட்டீர்களே சகோ.ஆமினா..!

    ஒரு கலக்கு கலக்கிட்டீங்க சகோ.

    ஆனாலும், அநியாயத்தை சுட்டிக்காட்டி சாதுரியமான நக்கலுடன் கேட்டவர் பின்னே இவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு தைரியமாக அஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சாமல் "நின்ன்ன்ன்ன்ன்ன்ன்று" இருக்கிறீர்களே..! யாருக்கு வரும் இந்த துணிவு..!

    ஒரு கலக்கு கலக்கிட்டீங்க சகோ.

    உங்களால்தான் உங்களுக்கு முன்னால் நின்ற அவருக்கு கிடைக்க வேண்டிய உரிமையான ௦.1 லிட்டர் கிடைத்து வெற்றி பெற்றார். ஆமாம்..! அதுதானே உண்மை சகோ..?

    ஒரு கலக்கு கலக்கிட்டீங்க சகோ.

    ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ரேஷன் கடை வரிசையில் கூட ஒரு பெண் 'நிற்க' வேண்டுமோ..???

    ஒரு கலக்கு கலக்கிட்டீங்க சகோ.

    பாராட்டுக்கள் சகோ.ஆமினா..!

    ReplyDelete
  34. @சகோ ஆஷிக்
    //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...//
    வ அலைக்கும் சலாம் வரஹ்....


    //நிறைய விபரங்களோடு...//
    ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு :-)


    அருமையான விழிப்புணர்வூட்டும் பதிவு சகோ.ஆமினா.//
    நன்றி சகோ.ஆஷிக் :-)


    //ஒரு கலக்கு கலக்கிட்டீங்க சகோ//
    இருக்கட்டும் சகோ :-)


    //முந்தைய பதிவில் ஜவுளிக்கடையிலே பேசின பேச்சில் ஒரு சதவீதம் கூட இங்கே பேசாமலேயே சாதித்து வெற்றி ஈட்டிவிட்டீர்களே சகோ.ஆமினா..!//
    எல்லா டயலாக்கும் நானே பேசுனா ஊர்ல உள்ளவங்களாம் ஊமையாக வேண்டியது தான் :-) இப்பலாம் பேசாமலேயே சாதிக்கிறது தான் அரசியலுலகில் புது ட்ரென்ட் :-)
    அப்பறம்........
    //வீராவேசமா// அவன்கிட்ட பேசுறதுக்கு நா ஒன்னும் ஆஷிக் அன்ணா இல்ல. சராசரி பெண் :-)


    ////ஒரு கலக்கு கலக்கிட்டீங்க சகோ////
    இருக்கட்டும் சகோ :-)

    //ஆனாலும், அநியாயத்தை சுட்டிக்காட்டி சாதுரியமான நக்கலுடன் கேட்டவர் பின்னே இவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு தைரியமாக அஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சாமல் "நின்ன்ன்ன்ன்ன்ன்ன்று" இருக்கிறீர்களே..! யாருக்கு வரும் இந்த துணிவு..!//
    உண்மை தான் சகோ..... யாருக்கும் வராது இந்த துணிவு. மக்கள்லாம் அழியும் போது ஒளிஞ்சுட்டு வேடிக்கை பார்த்த கூட்டம் தானே :-)


    //ஒரு கலக்கு கலக்கிட்டீங்க சகோ.//
    இருக்கட்டும் சகோ :-)


    //உங்களால்தான் உங்களுக்கு முன்னால் நின்ற அவருக்கு கிடைக்க வேண்டிய உரிமையான ௦.1 லிட்டர் கிடைத்து வெற்றி பெற்றார். ஆமாம்..! அதுதானே உண்மை சகோ..?//
    ஓ அப்படியா???

    ஆமாம்...! நீங்க சொன்னா அது தானே உண்மை சகோ...?

    ////ஒரு கலக்கு கலக்கிட்டீங்க சகோ.////
    இருக்கட்டும் சகோ :-)

    //ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ரேஷன் கடை வரிசையில் கூட ஒரு பெண் 'நிற்க' வேண்டுமோ..???//
    ஹி...ஹி...ஹி...
    இதுக்கு நிறையா எழுதணும் போல இருக்கு.... ஆனா நேரமின்மையால் இப்போதைக்கு வேணாம்.....
    அந்த சகோ பின்னாடி யார் "நின்றா"லும் இந்த வார்த்தைய கேட்டிருப்பாரே சகோ ஆஷிக்....????


    //ஒரு கலக்கு கலக்கிட்டீங்க சகோ//
    இருக்கட்டும் சகோ :-)

    //பாராட்டுக்கள் சகோ.ஆமினா..! //
    :-))))))))))))))
    வருகைக்கும் "கருத்துக்களுக்கும்" நன்றி சகோ.ஆஷிக்..!

    ReplyDelete
  35. //பாரத்... பாரதி... said...

    ரொம்ப நாளைக்கு பிறகு போனதால் கொந்தளிச்சு போயிட்டிங்க.. வழக்கமாக போகிறவர்கள் இந்த கொடுமைகளை எல்லாம் சகித்து கொள்ள பழகிவிட்டதாகவே தோணுகிறது.//
    உண்மை தான் பாரதி
    அம்மாகிட்ட சொல்லும் போது ஏன் தேவையில்லாத பிரச்சனை? கத்துறதுனால அவன் திருந்திடுவானாக்கும்னு சொன்னாங்க :-(

    ReplyDelete
  36. ஜலீலாக்கா

    ம்ம்

    ReplyDelete
  37. அமுதா
    ஹி...ஹி...ஹி...

    ReplyDelete
  38. @கருண்
    //அட..அட.. என்னமா திட்றீங்க...//
    சே...செ....

    தப்பாலாம் சொல்லாதீங்கோ :-)

    ReplyDelete
  39. @மாமி

    இது எனக்கு புது அனுபவம் மாமி....

    இந்த பாடுலாம் இருக்கான்னு தெரியல... இனி அனுபவிச்சு தான் ஆகணூம் :-(

    ReplyDelete
  40. @காந்தி பனாங்கூர்
    //அவன் குடும்பமே இந்த திருட்டு காசுல தான் வாழுதுன்னா பாத்துக்குங்களேன்.//
    அடெடே........

    அப்படியா????

    :-)

    ReplyDelete
  41. @சித்ரா
    //உண்மையிலேயே விசாரணை கமிஷன் வைக்க சொல்லணும்ங்க.//

    :-))))

    ReplyDelete
  42. @சகோ பாசித்

    வ அலைக்கும் சலாம் வரஹ்..

    //தெரில. அதனால ஓட்டு போட்டுட்டு கெளம்புறேன்...//
    அட..... என்ன தெரியாதுன்னு சொல்லிட்டீங்க???? ஆஷிக் அண்ணாவை கூப்டுங்க....

    ReplyDelete
  43. @அரசன்
    //இவனுங்களை திருந்த ரமணா குரூப் கிட்ட சொல்லிடலாம் .//
    ரமணா க்ரூப் தலைவர் நீங்க தானே :-)

    ReplyDelete
  44. சகோ ரஜின்
    வஸ்ஸலாம்
    அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்த்ரேலியா போய்ட்டு வந்தாச்சா சகோ? பத்து நாள் போதுமா? ஹி..ஹி..ஹி... எங்கே போனாலும் நெட் இருக்குமே... மாட்டாமலா போய்டுவீங்கோ???

    //போகட்டும் யார்கிட்டையும் சொல்லிக்காதீங்க..//
    அச்சச்ச்சோ........
    இவ்வளவு அற்புதமான கவிதைய சொல்லிட்டு அத வெளீயில சொல்ல கூடாதுன்னா எப்படி சகோ? அப்பறம் கவிஞர் ரஜின் பெருமை எப்படி வுகலத்துல பரப்புறது??? :-)

    //நாம கொஞ்சம் காலேஜ் அதுஇதுன்னு போக ஆரம்ச்ச ஒடனையே..தம்பின்னு ஒருத்தன் எதுக்கு இருக்கான்...//
    தம்பி எப்படி படிக்கிறான் பாரு,.... அவன பாத்தாவது திருந்து, அரியர் வச்சு மானத்த வாங்காத அப்டின்னு அம்மா திட்டுறதுக்காகவா சகோ????

    அப்பறம் தாங்கள் குறிப்பிட்ட காலேஜ் எனும் பதத்தின் முழுவடிவம் டுடோரியல் காலேஜ் தானே :-))

    //அது ஒரு கனா காலம்! ஹ்ம்ம்.//
    கனா??? யூ மீன் கனவு????
    தூங்கியே காலத்த கழிச்சுட்டீங்களோ?? ஐய்யோ பாவம் :-)


    //(இப்போ கொஞ்சம் உக்கிரம் கம்மிய்யா பதில் வரலாம்..:)//
    அதென்னவோ உண்மை தான் சகோ.... நீங்க அமெரிக்கா ஐரோப்பான்னு போனதுனால பதில் இப்படி உப்பு சப்பில்லாம வந்துருச்சு :-( அடுத்த முறை என் கவுண்டர் தான் :-))

    ReplyDelete
  45. @ரெவரி
    //கொஞ்ச வருஷமா வீடியோ காமெரா..செல் காமெரா சகிதமா மக்கள் மிரட்டினப்போ கொஞ்சம் அடக்கி வாசிச்சானுங்கோ..இப்பம் மறுபடியும் ...//

    ம்
    :-(

    ReplyDelete
  46. @சண்முகவேல்
    //ஆனால் பழகி விட்டார்கள்.//
    ம்
    :-(

    ReplyDelete
  47. @அதிரா

    மிக்க நன்றி அதிரா

    ReplyDelete
  48. @யோகா

    "அம்மா"காதில் இதுவெல்லாம் விழாமலா இருக்கும்?//

    விழுகுறதுக்குள்ள அடுத்த ஆட்சி வந்துடும்... இப்படி தான் காலம் காலமா நடக்குது :-)

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  49. @தம்பி பிரபு
    //அடுத்த முறையில் இருந்து எங்களுக்கு ஒழுங்காக வரும்.///

    அடுத்த முறையில் இருந்து உங்களுக்கு ஒழுங்கா வரும்?????

    ReplyDelete
  50. @அந்நியன்
    கண்டிப்பாக ஒரு புரட்சி ஏற்படும் சகோ

    நன்றிகள்

    ReplyDelete
  51. @மாய உலகம்

    உண்மை தான் சகோ....

    இவனுங்க பண்ற தொந்தரவு தாங்க முடியல....

    ReplyDelete
  52. @விக்கியுலகம்
    //என்ன செய்ய தானும் ஞாயத்தை கேற்க மாட்டான்....அடுத்தவன் கேட்டாலும் உடன் வரமாட்டான் மனிதன்..///

    அதுக்கு தான் பல சமயங்கள் மௌனத்தையே பலர் கடைபிடிக்கிறாங்க சகோ..... சப்போர்ட் பண்ணலன்னாலும் பரவால்ல சகோ.... எதுக்குமா உனக்கு தெல்லாம் தேவையான்னு கெக்கும் போது செருப்பால அடிச்சாப்ல இருக்கும் :-(

    ReplyDelete
  53. @ரியாஸ்

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  54. @அம்பலத்தார்
    //? இனி அவங்க புழைப்பு என்னாகிறது ரொம்பவும்தான் நொந்துபோயிடமாட்டானுக!//
    அட நீங்க வேற....

    இப்பவும் திருந்த மாட்டானுங்க.

    இப்படி பதிவ் போட்டவங்க அட்ரஸ கண்ட்பிடிச்சாவது பதிவு நீக்குறியா இல்லையான்னு சத்தம் போடுவாங்க :-)

    ReplyDelete
  55. @ஆயிஷா
    வ அலைக்கும் சலாம் வரஹ்,,,

    //ஆமினா சமூக பிரச்சனையில் இறங்கியாச்சே என்ன விஷயம்...//

    இல்ல ஆயிஷா

    அப்பப்ப கண் முன்னாடி நடக்குறத புலம்புறேன் அவ்வளவு தான்

    ஐ ஆம் ட்ராபிக் ராமசாமியோ அன்னாவோ இல்லையே..... புலம்புறத தவிர என்ன செய்ய? :-)

    ReplyDelete
  56. @ராஜா

    மிக்க நன்றி ராஜா

    ReplyDelete
  57. @சக்தி

    எது சரி? :-)

    ReplyDelete
  58. @கவியழகன்
    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  59. @அம்பாளடியாள்
    //ஆனா உங்க வலைத்தளத்தில ஒரு பிச்சக்காறி இணைசிற்ரோமில்ல
    ஓட்டும்போட்டு பின்தொடர்வோர் எண்ணிக்கையைக் கூட்டினா
    சும்மாவா//

    அட ஏன் இப்படி சொல்றீங்க

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  60. @சிவகுமார்
    வரலாறு கிட்ட சொல்றதை விட உளி அடிப்பவரிடம் சொல்லி இருக்கலாம்..///

    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
    கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  61. @ஶ்ரீதர், நிரூபன்
    மிக்க நன்றி சகோஸ்!!!!!11

    ReplyDelete
  62. @அந்நியன்
    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  63. //எல்லாத்துக்கும் கவுண்ட்டர் எழுதிட்டு இருக்காதீக..அண்ணன் வெளியூர் போறேன்,,வர..ம்ம்...ஆ,,10 நாள் ஆகும்,,,//

    சொல்லுப்பேச்சு கேக்ரதே இல்ல...
    ஹ்ம்ம்...

    இந்த காலேஜ்,தம்பி மேட்டர்க்கெல்லா இப்டி பதில் வரும்ன்னு கனவுலையும் நெனைக்கல...(ஐயோ திரும்பவும் கனவா??..)

    நானெல்லா ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் ஆனவனாக்கும்...இப்டில்லா டுட்டோரியல் அது இதுன்னு பேசப்படாது...

    படிக்கிறது எவ்ளோ எவ்ளோ கஷ்டம் தெரியுமா???

    //அடுத்த முறை என் கவுண்டர் தான் :-))//

    பேச்சு பேச்சா இருக்கோனும்..அண்ணே ஒரு அறிவுறை சொல்லவா?

    எப்போதும் வன்முறை கைல எடுக்கப்படாது..எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கனும் சரியா...:(

    (நெஜமாவே துப்பாக்கி இருக்குமோ...:(

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  64. /எல்லாத்துக்கும் கவுண்ட்டர் எழுதிட்டு இருக்காதீக..அண்ணன் வெளியூர் போறேன்,,வர..ம்ம்...ஆ,,10 நாள் ஆகும்,,,//

    சொல்லுப்பேச்சு கேக்ரதே இல்ல...
    ஹ்ம்ம்...///////

    ஏன்ண்ணா???? சொல்லுபேச்சுக்கு காதுல எதாவது ப்ராப்லமா?

    ///இந்த காலேஜ்,தம்பி மேட்டர்க்கெல்லா இப்டி பதில் வரும்ன்னு கனவுலையும் நெனைக்கல...(ஐயோ திரும்பவும் கனவா??..)//
    கனவு தூக்கத்துல தானே வரும்? அந்த நேரத்துல நெனச்சா எப்படி தூங்கியிருப்பீங்கோ??டவுட்டு......

    //நானெல்லா ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் ஆனவனாக்கும்...இப்டில்லா டுட்டோரியல் அது இதுன்னு பேசப்படாது...//
    அத தான் நானும் சொன்னேன். பர்ஸ்ட் க்லாஸ்ல மட்டும் தான் பாஸ். அதுக்கப்பறம் டுடோரியலே சரணம் :-))

    //படிக்கிறது எவ்ளோ எவ்ளோ கஷ்டம் தெரியுமா???///
    உங்கள பார்த்ததுக்கு அப்பறமும் இந்த கேள்விய எப்படி கேட்பேன்? ஹி..ஹி..ஹி....


    //அறிவுறை சொல்லவா?//
    அறிவுரை :-) பர்ஸ்ட் க்ளாஸ் எவ்ளோ எவ்ளோ கஷ்ட்டம்னு சத்தியமா கண்ணு முன்னாடி தெரியுது ரஜின் அண்ணே......

    //எப்போதும் வன்முறை கைல எடுக்கப்படாது..//
    தலைல எடுத்துக்கிட்டா ஒத்துப்பேளா????

    //எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கனும் சரியா...:(//
    இப்படி பேசுனதுக்கு அப்பறம் ஆளையே தீத்துறதுக்கு பதிலா பேசாமலேயே இருக்கலாம்..... அப்பறம் கோர்ட் கேஸுன்னு ஆரு அலைவா? :-(

    //(நெஜமாவே துப்பாக்கி இருக்குமோ...:(//
    மேலுள்ள பதிலுக்கு பிறகும் சந்தேகமா? :-))

    ReplyDelete
  65. அட..! நீங்களும் பதிவு சைசுக்கு மறுமொழி எழுத ஆரம்பிச்சிட்டீங்களா..!

    //அந்த சகோ பின்னாடி யார் "நின்றா"லும் இந்த வார்த்தைய கேட்டிருப்பாரே சகோ ஆஷிக்....????//

    இல்லையே..!

    உங்களுக்கு முன்னாடி நின்றிருந்தவருக்கு முன்னாடி நிறைய பேர் நின்றிருந்தார்கள் அல்லவா..?

    இவருக்கு நடந்த அதே கொடுமை முன்னின்ற மற்றவர்களுக்கும் நடந்தது அல்லவா..?

    அவர்கள் எல்லாம் ஏன் அநியாயத்தை தட்டிக்கேட்கவில்லை..? உங்களுக்கு முன்னின்ற இவர் மட்டும் ஏன் கேட்டார்..?

    இன்னும் புரியலையா..? உங்கள் வீராவேசமான எண்ண அலைகள்தான் அவரை தாக்கி அப்படி பேச வச்சிருக்குதுன்னு..?

    ஹலோ...! யாரது... பக்கத்துலே அபிராமத்துல இருக்கிற சகோ.ரஜினா..? ஒரு லோடு பல்பு ராம்நாடுக்கு என் பேர்ல ஏற்றுமதி பன்னிருங்க சகோ. திர்ஹாம்ல செட்டில் பண்ணிடறேன்.

    ஒரு கலக்கு கலக்கிட்டீங்க சகோ.---நீங்க.

    இருக்கட்டும் சகோ :-)---நான்.

    ReplyDelete
  66. அட..! நீங்களும் பதிவு சைசுக்கு மறுமொழி எழுத ஆரம்பிச்சிட்டீங்களா..!//
    கருத்துரை சைஸுக்குதானே மறுமொழிபோட முடியும்? வேணூம்னா சொல்லுங்க சகோ......... அடுத்த உங்க கமென்ட்ஸ்கெல்லாம் :-) மட்டும் போட்டுட்டு போறேன் :-)

    //இன்னும் புரியலையா..? உங்கள் வீராவேசமான எண்ண அலைகள்தான் அவரை தாக்கி அப்படி பேச வச்சிருக்குதுன்னு..?
    //
    ஓஹோ...........
    வெடிகுண்டு வெடிச்ச அடுத்த 5வது நிமிஷமே இந்த க்ரூப் தான் காரணம்னு செய்தி சொல்லுவாங்களே..........அவரா நீங்க???????????
    :-))

    சரி உங்க பாய்ன்ட் படியே வரேனே...
    இப்பகூட உங்கள கொல பண்ணனும்னு வீராவேசமான எண்ண அலைகள் மனசுல ஓடுது. உங்க கமென்ட்க்கு முன்னாடி ஒரு அபிராமத்துக்காரர் இருக்காரே...... என் வீராவேசமான எண்ண அலைகள் அவரை தாக்கி அப்படி கொல செய்ய வச்சுடுமா?


    ஹலோ யாரது சகோ ஆஷிக் பக்கத்து ஊர்க்காரங்க? போகும் போது ஒரு வார்த்த சொல்லிட்டு போங்க.......... ஒரு டன் ட்யூப் பல்ப் அனுப்பி வைக்கணும் :-)

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)