நா ஏன் சீரியல் பாக்குறதில்லைங்குறதன் காரணத்தை, ரகசியத்தை, உண்மையை உலகுக்கு போட்டு உடைக்கும் தருணம் இது! என்னைய தடுக்காதீங்க! விடுங்க!விடுங்க! நா இத இப்பவே சொல்லியே ஆகணும்!!!
செம பில்டப்பா இருக்கோ:-) சீரியல் பத்தி பேசுறோம்ல? அதெல்லாம் அப்படி தான் செமடாப்புல பில்டப்பு இருக்கும்!
சரி இப்ப என்ன்ன்ன்ன்ன்ன்னா மேட்டர்ன்ன்ன்ன்னா... ஐ டோன்ட் லைக் அழுவாச்சி பக்கிஸ்... சீரியல் பிடிக்காதுன்னு சொல்றதுக்கான மொக்கையான காரணமா இருக்கோ! சரி சரி முட்டைய ஓரம்மா வைங்க! ஆம்லேட் போட ஒதவும்!
இரு பெண்கள் பேசிக்கொண்டாலே அது துளசியையும் செல்லம்மா பத்தியுமா தான் இருக்கு! இத்தனைக்கும் ஏன்?? ஹாஸ்பிட்டல்ல மூச்சி தெணறிட்டிருக்குற நெலமையிலையும் ரிசப்ஷன்ல சன்டீவிய போட சொல்லும் அளவுக்கு அதிமுக்கிய நடைமுறை பழக்கமாக மாறிடுச்சு! இலங்கைக்கு எதிரா ஓட்டு போட்ட நாடு எதுன்னு கேட்டா பதில் வருமா??? ஆனா சீரியல்களின் எபிசோட் முதல் அதில் உள்ளவர்களின் பெயர் வரைக்கும் செம அத்துபடி நமக்கு! இந்த பதிவினூடாக காலைல பத்துமணில இருந்து ஆரம்பிச்சு நைட் 11 மணி வரைக்கும் கொலையா கொல்லும் மெகா சீரியல்ஸின் மொக்க விஷயங்களை நாமும் கொஞ்சம் கொலையா கொல்லபோறோம்!
நன்றி
அடுத்தபதிவில் சந்திக்கலாம்..
தொடரும்.. மலரும்... முற்றும்... பூக்கும்... சாகும்...
ஹி..ஹி..ஹி.. இப்ப என்ன சொல்லிட்டேன்னு முட்டைல ஆசிட்ட மிக்ஸ்
பண்றீங்கோ?!! பின்ன என்ன? மிஞ்சி போனா ஒரு கல்யாணம் 8 மணி நேரத்துல நடந்துடும்! ஆனா இவனுங்க காட்டுற கல்யாண வீடாகட்டும் எழவு வீடாகட்டும் எல்லாமே மாசக்கணக்குல நடக்குது! அபின்னு ஒரு அக்கா 2 கொழந்தையையும் பாட்டி ஆகுற வரைக்கும் கோலம் போடுறத விடாது போலனு செமையா பயந்தே போயிட்டேன்! ஒருவழியா போயிட்டாக! இப்ப கஸ்தூரி அக்கா தான் விடாது தொறத்துது!
சரி சீரியல்ல இருக்குற மொக்க விஷயத்த பாக்கலாம்! :
- எங்க பக்கத்துவீட்டு பேச்சியம்மா, கண்ணாத்தா கூட கல்யாணத்துக்கு பொறவு சுடிதார்ல கலக்குதுங்க! ஆனா சீரியல்ல வர பக்கிங்க மட்டும் மொதல்ல மாடர்ன்னா இருக்குங்களாம்... கல்யாணம் ஆய்ட்டா சேல மட்டும் தான் போடுவாங்களாம்! எப்ப பா திருந்த போறீங்க??? அய்ய்யோ அய்யோ....
- கருப்பு, வெள்ள தான் இப்ப இருக்குற ட்ரென்ட்! ஆனா பாருங்க! கருப்பா இருக்குற ஆளையெல்லாம் போட மாட்டானுவ! வெயிலுக்கு காட்டாம வளத்த வெள்ளச்சிக்கு கருப்பு பெயின்ட் அடிச்சி விடுவானுவ! எதுக்குன்னு கேக்குறீங்களா???? 1000வது எபிசோட்க்கு பொறவு ஒரு ட்விஸ்ட் வைக்கதேன்! பெயின்ட் முகக்ரீம் கம்பெனிக்கு செம வெளம்பரம்! வாழ்க வளமுடன்
- அதென்ன மாயமோ தெரியல! மந்திரமோ புரியல! ஒட்டுமொத்தமா எல்லா அம்மணிகளும் மாமியார்கிட்ட ரொம்பதேன் பம்முதுங்க! அதே மாதிரி ஒன்னு விடாம எல்லா சீரியல்ஸ் அத்தைகளும் வில்லியாவே இருக்காங்க! கொட்டோ கொட்டுன்னு மழ பெய்யும் போது மாமியார் வீட்ட விட்டு அனுப்புறதும்! இவுக எதையும் தட்டி கேட்காம இருக்குறதும், மாமியாரின் திட்டுக்களை "தேன் வந்து பாயுது காதினிலே"ங்குற கணக்கா கண்டுக்காம இருக்குறதும்............. சரி சரி இதெல்லாம் சீரியல்ல பாத்தாதான் உண்டு ;-)
- இதுல பெரிய கொடுமை என்னான்னா ரோட்ல மயக்கம் போட்டு ஒருத்தன் விழுந்தா கூட "எனக்கென்ன போச்சுன்னு" சொல்லும் மனிதநேயம் நிறைந்த நம்மாளுங்க சீரியல் ஆத்தாக்களின் பொய் அழுகையை "ஐய்யோ பாவமே, இப்படி ஆச்சே! ச்சே! இப்படியெல்லாமா கொடும நடக்கும்"னு லைவ் கமென்ட்ரி கொடுக்குறது பார்த்தா...... ஹன்ட்ரட் பெரியார்ஸ் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்தவேமுடியாது! (பலருக்கு இரக்க குணம் உண்டு என்பதை சீரியல் பாக்கும் போது தான் தெரியுது!)
- இவிங்க அறுக்குறதே தாங்கமுடியலன்னு செவத்துல முட்டிட்டிருந்தா..... ஹிந்தி டப்பிங் சீரியல் மூலமா அறுக்காம நேரடியாவே சாவடிக்கிறாய்ங்க! அடிக்கடி டூயட் சாங்க் வேற! ஒரு ரியாக்ஷன்க்கே ஒரு எபிசோட் ஓட்டிடுறாய்ங்க! தெய்வமே என்னைய காப்பாத்து!
- நீ உண்மையிலேயே ஒரு முஸ்லீம்மான்னு ஒரு பிரன்ட் கேட்டாங்க! இதென்ன எனக்கு வந்த சோதனைன்னு "ஏன்ப்பா இப்படியெல்லாம் சொல்ற?"ன்னு கேட்டா, " உனக்கு தான் 2 புருவம் ஒன்னா சேரலையே?! உருது,அரபில பேசலையே?!"ன்னு சொன்னாங்க! இதுக்கு எப்படி பதில் சொல்றதுன்னு மூளைய தட்டி எழுப்பிட்டிருக்கும் போதே "ஆமா..... உங்க(?????????!!!) தர்கால பேய்,பைத்தியம்லாம் தெளிய வைக்கிற சக்தி இருக்காம்ல?! உண்மையா?ன்னு ஒரு அடுத்தடுத்த கேள்வி கேட்டா!
உனக்கு எப்படி இந்த அளவுக்கு அறிவு வந்துச்சுன்னு கேக்கும் போது தான் பயபுள்ள சொல்லுது... டெய்லி நாதஸ்வரம்,தபேலா,கித்தார் போன்ற ஒலக பிரசிதிப்பெற்ற காவியங்களை பாத்திட்டிருக்கான்னு!
நம்ம கலைஞர் சரியாதான் யோசிச்சு எலவசமா கலர் டீவி கொடுத்திருக்காரு! அதனாலேயே குட்டீஸ்க்கும் பெரிசுகளுக்கும் நடக்கும் ரிமோட் சண்டை இப்பலாம் இல்ல,நெஹி,லேது! முன்னலாம் சொந்தக்காரங்க வீட்டுக்கு சாயங்காலமா போகும் வழக்கம் இருந்துச்சு! அம்ம்ம்ம்ம்ம்ம்மாடி இப்பலாம் சாயங்காலம் 6 டூ பத்து திருடன் வீட்டுக்குள்ள வந்தாலும் கண்டுக்க மாட்டாய்ங்க! நாம போனாவா வாங்கன்னு சொல்லி உபசரிச்சுட போறாங்க?!!
பொழுது போக்குக்காக ஏற்படுத்திக்கொண்ட விஷயங்கள் பலவற்றிற்கும் நாம் அடிமையாகிவிட்டது போல் தான் இந்த சீரியல்களும்! சரியான மனக்கட்டுப்பாடு இல்லை என்றால் கூடியவிரைவில் சைக்கோக்கள் வீட்டில் உருவாவது கேரண்டி!
சீரியல்ஸின் உன்னத உயர்நோக்கு கொள்கைகள் ஏதேனும் விடுபட்டிருப்பின் மன்னிச்சூ மன்னிச்சூ மன்னிச்சூ!!!! மொக்கை விமர்சனங்களை வரவேற்கப்படுகின்றன! குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பத்து துரதிஷ்ட்டசாலிகளுக்கு பவர்ஸ்டாரின் ஆனந்த தொல்லை டீவிடியும், முகவையின் விடிவெள்ளி ரித்திஷ் குமாரை சந்திக்கும் வாய்ப்பும் கொடுக்கப்படும்! ஹி..ஹி..ஹி..
டிஸ்கி: குட்டிசுவர்க்கத்தில் இருந்த ப்ளாக்ஸ்பாட்டை தூக்கியாச்சு! அந்த இடத்தில் .com மாத்தியாச்சு!