பல பதிவர்கள் ராஜவேல் பற்றி பதிவிட்டு அரசின்  கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.  ஏழ்மை ஒரு மனிதனின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றும்  வல்லமை கொண்டதா என்ன? தங்கவேல் பற்றிய செய்தி வாசித்ததும் மனம் கனத்துவிட்டது. கொஞ்சம் ஸ்பெக்ரம், கோயில் தங்க புதையல், மங்காத்தா ரிலீஸ் லாம் ஒதுக்கி வச்சுட்டு ராஜ வேல் வாழ்க்கையில் சூரியனாய் ஒளி கொடுக்க முடியவில்லை என்றாலும் அவனின் வாழ்க்கையில் குறிக்கோள் பாதையில் சிறு மெழுகுவர்த்தியாய் உதவலாமே!!!!  அதன் பிறகு கண்டிப்பாக // ஏழ்மை ஒரு மனிதனின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றும்  வல்லமை கொண்டதா என்ன? // கேள்விக்கு முடியவே முடியாது என பதில் கூறி பெருமைப்படலாம்

//எத்தனையோ தினச்செய்திகள் பரபரப்பாக வந்துசென்றாலும் அவற்றில் ஒருசில செய்திகளே நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கடந்தவாரம் நிகழ்த்தப்பட்ட மும்பை குண்டுவெடிப்பு செய்திகளைக் கேட்டு பதைபதைத்தவர்கள் நேற்றுமுன் தினம் நார்வேயில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பு குறித்து கவலைப்பட்டனரா என்று தெரியவில்லை! மனித உயிர்கள்மீதான மதிப்புகூட நாட்டுக்குநாடு வேறுபடுமா என்ன?

இப்படித்தான், நேற்று வலைப்பூவில் ராஜ் தொலைக்காட்சி செய்தி குறித்த ஓர் பதிவை வாசித்தபிறகு அன்றிரவு தூக்கம் தொலைந்தது! செய்தியொன்றும் பரபரப்பானது அல்ல. ஆனால் ஏனோ தெரியவில்லை அதை வாசித்த பிறகு எப்படியாவது உதவமுடியுமா?என்ற எண்ண ஓட்டம் மனதை அலைக்கழித்தது. செய்தி என்னவென்றால்,

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்(50). இவரது மனைவி லெட்சுமி(45). விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு, ராஜவேல்(17), என்ற மகனும், சுபாஷினி என்ற மகளும் உள்ளனர்.

ராஜவேல் சிறுகடம்பூர் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில், 470 மதிப்பெண் பெற்று, பள்ளியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். கூலித் தொழிலாளியின் மகனான ராஜவேல், அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து, வேறுபள்ளியில் படிக்க வைத்தால், +2வில் அதிக மதிப்பெண்கள் பெறுவார் என பள்ளி ஆசிரியர்களும், மாணவனின் உறவினர்களும் கூறியதையடுத்து தங்கவேல், சிறுகடம்பூரில் இருந்த தனது வீட்டை விற்று, சேலம் மாவட்டம் வீரகனூரில் உள்ள ராகவேந்திரா பள்ளியில் மகனைச் சேர்த்து படிக்க வைத்தார். தற்போது செந்துறையில் உள்ள நமச்சிவாயம் என்பவரது வயலில், ஒரு கொட்டகையில் குடியிருந்து, விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

ராகவேந்திரா பள்ளியில், +2 படித்த ராஜவேல் 1200க்கு 1,171 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடமும், மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்றார். கூலித்தொழிலாளியின் மகனான ராஜவேலின் ஏழ்மை நிலையை அறிந்த ராகவேந்திரா பள்ளி நிர்வாகம், அவரது மருத்துவ பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களைப் பெற்று, சொந்த செலவில் மருத்துவ கவுன்சிலிங்குக்கு அனுப்பி வைத்தனர். கவுன்சிலிங்கில் 198.5 'கட் ஆப்' மதிப்பெண்கள் பெற்ற அவருக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.

ஆனால் அவரின் ஏழ்மை மருத்துவக்கல்லூரியில் சேரவிடாமல் அவரைத் துரத்துகிறது. மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் செலுத்த முடியாமல், ராஜவேலுவின் தந்தை தங்கவேலு தவித்து வருகிறார். மகனுடைய +2 படிப்புக்காக, வீட்டை விற்று விட்டு, விவசாய நிலத்தில் குடியிருந்து வரும் தங்கவேலு, மகனின் டாக்டர் பட்டப் படிப்புக்குப் பணம் கட்ட வழியின்றி திணறி வருகிறார். அதனால், தற்போது தங்கவேலுக்கு உதவியாக, ராஜவேலுவும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இதுகுறித்த செய்தி ராஜ் தொலைக்காட்சியில் வெளியாகி, அதை எங்களூர் வலைத்தளப் பதிவொன்றில் வெளியிட்டுள்ளார்கள்.

தேசியளவில் 16 வயதுடைய அனைவருக்கும் கல்வி என்ற மத்திய அரசின் கட்டாயக் கல்வி திட்டம் ஒருபக்கம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்திலும் கல்விக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. எனினும், இவை எல்லாம் தொடக்க நிலையிலிருந்து குறிப்பிட்ட வகுப்புகள்வரை மட்டுமே கண்காணிக்கப்பட்டு வருகின்றன.கல்விக்கண் திறந்து கொண்டு எதிர்காலத்தில் பொறியாளராகவோ மருத்துவராகவோ வழக்கறிஞராகவோ ஆக வேண்டும் என்ற பலரது கனவுகள் SSLC, +2 தேர்வுகளுக்குப்பிறகு கானல்நீராக கலைவதற்குப் பின்னணியில் ஏழ்மையும் குடும்பச்சுமையும் உள்ளன!

மகனின் படிப்பாக வசித்த வீட்டை விற்றபின்னரும் மேல்படிப்புக்குச் செலவளிக்க வழியற்ற ஏழைகள் இருக்கும் நாட்டில்தான் நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும் போது யார்மீதோ கோபம் வந்தாலும், அது யாரென்று குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று அலப்பரை செய்யும் அரசியல்வாதிகள், பல உயிர்களைக் காப்பாற்றும் சாத்தியமுள்ள ராஜவேலு போன்ற ஏழை பாரத ரத்னாக்களை அடையாளம் கண்டு உதவினால் புண்ணியமாகப் போகுமே!

இந்த மாணவனின் மேற்படிப்புக்கு உதவக்கோரி அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் முயற்சியாக இந்தச் செய்தியை உங்கள் தளத்தில் வெளியிட்டு, பாரத தேசத்திற்கு மேலும் ஒரு மருத்துவர் கிடைக்க உதவலாமே!

இச்செய்தியை ச‌க‌வ‌லைப்ப‌திவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வ‌லைத்த‌ள‌த்தில் வெளியிட்டு அர‌சின் க‌வ‌ன‌த்திற்க்கு கொண்டு செல்லலாமே..

நன்றி: இந்நேரம்.காம்


, , ,

12 comments:

  1. நானும் என் பதிவில் இதை போட்டுருக்கேன்.....

    தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்....

    ReplyDelete
  2. கஷ்டமா இருக்குது................

    ReplyDelete
  3. இளமையில் இல்லாமை கொடுமைதான்.

    ReplyDelete
  4. நிச்சயம் செய்வோம்.

    ReplyDelete
  5. @கருன்
    மிக்க நன்றி சகோ

    @மனோ

    நம்பிக்கையோடு செயல்படுவோம்.. மாற்றம் உருவாகும் என நம்புவோம்!!!

    @ஆகுலன்
    மாறாதது எதுவுமே இல்லை சகோ ஆகுலன்!!!

    @சாதிகா அக்கா
    உண்மை தான்.... வாழ்க்கையையே இருட்டாக்கி வைக்கும் கொடிய விஷம்!!

    @பலே ப்ரபு
    நம்பிக்கை வார்த்தைக்கு மிக்க நன்றி!!!

    ReplyDelete
  6. இளமையில் வறுமை மிக கொடியது,ரொம்ப கஷ்டமாகிவிட்டது...

    ReplyDelete
  7. நாம் பதிவிடுவது தமிழக அரசுக்கு எப்படிப் போய் சேறும்?

    ஒரு மனுவாகவோ அல்லது சி எம்மின் செல்லுக்கு தகவலாகவோ அனுப்பியால் மட்டுமே இந்த வருங்கால டாக்டரின் கனவு நிறைவேறும்.

    இருந்த போதும் உங்களின் உழைப்பிற்க்கு ஊதியம் கிடைக்கட்டும் அந்த வருங்கால டாக்டரின் கனவுகள் மூலமாக.

    எனது ஆதரவு எப்போதும் ஏழைகளுக்கு உண்டு.
    அந்த சகோதரனின் வங்கி கணக்கு இருந்தால் தெரிவிக்கவும்.

    ReplyDelete
  8. கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய அவசிய பதிவு ...

    ReplyDelete
  9. ராஜவேல் பற்றிய தகவலுக்கு நன்றி ஆமினா. இது குறித்து என் நண்பர்களுக்கும் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  10. அரசு உதவ முன் வர வேண்டும்

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)