maam is disturb me now-u! i am happy how??!!
என்னடா எல்லாரும் கொலவெறின்னு ஒரு தலைப்பையே வச்சு பதிவு போடுறாங்களேன்னு ஒரே ஆராய்ச்சி.. ஆராய்ச்சி முடிவுல தான் தெரிஞ்சது தி ஹிந்து கவர் ஸ்டோரி, ஒரு வாரத்தில் யூடூப்பில் 40 லட்சம் ஹிட்ஸ் (இப்ப 9,415,759 , இளசுகள் முனுமுனுக்கும்(??!!) பாடல், இதுவரைக்கும் தமிழ்பாட்டுக்கு இல்லாத வரவேற்பு..... எல்லாத்துக்கும் காரணம் வொய் திஸ் கொலவெறி??????

முதல் தடவ கேட்டதும் பிடிச்சு போச்சு.  பாட்ட டவுன்லோட் பண்ணி (மொதமொத சொயமா டவுன்லோட் பண்ண பாட்டு இதுதேன் அவ்வ்வ்வ்.....) கேட்டேன். மொத தடவையிலேயே கப்புன்னு மனசுல வரிகள் உக்கார்ந்துச்சு (?!!)

ஆஹா....ஆஹா.... என்னமா பாடியிருக்காரு.... அட...அட,...அட.....

பாட்ட முழுக்க அப்படியே ஒரு பேப்பர்ல எழுதி மனப்பாடம் பண்ணுட்டிருந்தேன். ஒடனே என் அம்மம்மா (பாட்டி) பரிச்சைக்கு படிக்குறீயா?"ன்னு கேக்குறாக. (கொலவெறின்னு வர்ர எடத்துல மட்டும் ஹொல்வெர்டி ;-)

சரின்னு மனப்பாடம் பண்ணி படிச்சா எங்க மாம்ஸ் (தாய் மாமா) இங்க்லீஸ் பாட்டுலாம் படிப்பீயா? நல்லாயிருக்கு"
ஒடனே நான் "ஆமா  தமிழ்ல என்ன பாட்ட எழுதுறானுவ? அதான் இங்க்லீஸ்க்கு மாறிட்டேன் மாம்ஸ்-u......

ஆக மொத்தத்துல படரிலீஸ்க்கு பொறவு எனக்கு எங்க வீட்ல மட்டும் எனக்கு கொலவெறியோட க்ளைமேக்ஸ் சீன் தான்னு  முடிவே பண்ணியாச்சு. அவ்வ்வ்வ்வ்.....

இந்த பாட்டு இங்க்லீஸ் பேசுறவுகள கேவலப்படுத்துற மாதிரி இருக்காம். தமிழ்ல்ல சாகடிக்கிற மாதிரி இருக்காம். இருக்குற இங்கிலிபீஸே மறந்து போய்டுமாம். ச்சச்ச... அப்படியெல்லாம் சொல்லாதீங்கோ.  on behalf of............. ன்னு யாரோ போட்டப்பவே அதுக்கு என்ன அர்த்தம்ன்னு டிக்ஸனரி(டிஸ்கவரி இல்ல), கூகுள் ட்ரான்ஸ்லேட் முழுக்க தேடிட்டிருந்தேன் ;-) ஆனா பாருங்கோ. மொத தடவ அந்த பாட்ட கேட்டப்பவே டிக்ஸ்னரி இல்லாம கப்புன்னு இங்கிலீஸ்லாம் புடிச்சுக்கிட்டேன். என்னமா வரி சேத்துருக்காக????

distance la moon-u moon-u
moon-u  color-u  white-u
white background night-u nigth-u
night-u color-u black-u


இந்த வரிக்கே எல்லாரும் தலமுடிய பிச்சுட்டு அலையலாம். ச்சச்ச... பைத்தியமா இல்ல...
எப்படி எல்லாம் அவங்க யோசிச்சுருந்தா இப்படிலாம் எழுதியிர்ப்பாங்கன்னு யோசிச்சு தலமுடியெல்லாம் போய்டும்னு சொல்றேன். இனி எம்மவன் மூன் என்ன கலர் ன்னு கேட்டா நா முழிப்பேன்???? இப்படியே எல்லா ஜிகேயும் ஒவ்வொரு பாட்டுலையும் கோர்த்தாங்கன்னா அடுத்த வருஷம்லாம் ரைம்ஸ் புத்தகத்துல இவுக பாட்டா தான் வரும். ஏற்கனவே மேல கொடுத்த வரிலாம் நல்லா பாருங்க. அழகான ரைம்ஸ் தானே அது? ஆக சின்ன வயசுல ரைம்ஸ் படிக்காதவங்க இந்த பாட்டு வரப்ரசாதம். இந்த கொலவெறி பாட்டு  மூலமா அந்த குறையை போக்கியிருக்கார் தனுஷ்... இப்படியான நல்லெண்ணத்தில் உருவாக்கப்பட்ட பாட்டையா மொக்கைன்னு சொல்றீக? வொய் திஸ் கொலவெறி??? 

அது யாருப்பா  பொம்பளைய கேவலப்படுத்துற மாதிரி வரி இருக்குன்னு சொன்னது?? அவர் எந்த அளவுக்கு அந்த பொண்ணுனால வேதனப்பட்டிருந்தா 33 தடவ கொலவெறின்னு சொல்லி ஒரு பாட்டு படிப்பாரு. ஒரு பொண்ண கேவலப்படுத்துனா ஒலகம் முழுக்க எல்லா பொண்ணுங்களையும் கேவலப்பத்துறானுவன்னு பீதிய கெளப்புறது? வொய் திஸ் கொலவெறி....

இது ஆங்கிலத்தின் புதிய சகாப்தம். இத பாலோ பண்ணி  பேச ஆரம்பிச்சா பட்டிக்காட்டான் கூட இனி  ஒப்பாரி வைக்கிறதுக்கு பதிலா oh god-u...... she is dead now-u. i am  happy how-u??? ன்னு பாட ஆரம்பிச்சுடுவாங்க. பொறவு என்ன? அப்துல் கலாம் என்ன கனவு காண சொல்றது?  ஒலகம் முழுக்க கொலவெறி இங்க்லீஸ் மொழி பேசி 2020ல இந்தியா எப்படியும் வல்லரசாய்டும்.

this-u song-u for lkg boys-u. I will not do home work-u!!!
ஆக இந்த படம்  ரிலீஸ் ஆவுறதுக்குள்ள பட்டி தொட்டிலாம் இங்க்லீஸ் பரவி குப்பைதொட்டிக்கு தமிழ் போய்டும். ஜெட்டு வேகத்துல சாவுதய்யா டமில்-U :-( :-( :-(

குறிப்பு- இந்த பாட்டை சில காரணங்களுக்காக வெறுத்தாலும்/ பிடிச்சாலும் கூட எப்பவும் குத்து சாங்க் நிலைக்காதுங்குறதுனால லூஸ்ல விடவேண்டிய விசயம் தான். உயிரே படத்துல வரும் பூங்காற்றிலே உன் சுவாசத்தை... எனும் பாட்டை இன்று வரையில் இனிக்கும் நமக்கு ரயில்ல ஏறி பாட்டு பாடுவானுங்களே அது என்ன பாட்டு (மறந்தே போச்சு)... இப்படித்தான். மறந்து போய்டும். சோ கொஞ்ச நாள்ல குப்பைல போகக்கூடிய பாட்டுக்காக மெனக்கெட்டு ஆ ஊ ன்னு கத்த எனக்கு ஜீவன் இல்ல :-(

 இந்த பாட்ட  எதிர்க்கும் முன் டாஸ்மாக், சீரழியும் இளைஞர்கள், சிக்ரெட் பத்தி பேசலாமே? சாரி... உண்ணாவிரதம் இருந்து கலாச்சாரத்த  கட்டி காப்பாத்துலாமே?!!!  ஆந்திரால போய் கார்த்தி  "நிச்சயமாக  தெலுங்கு ரசிகர்களைத்தான் எனக்கு பிடிக்கும்... தெலுங்கு ரசிகர்கள் தான் ஒவ்வொரு சீனுக்கும்,  ஒவ்வொரு பிரேமுக்கும் கை தட்டி,  விசிலடிச்சு ரசிக்கிறாங்க.. ஆனால்  தமிழ் ரசிகர்கள் அப்படி இல்லை.. " சொன்னதுக்கு என்ன வகையான எதிர்ப்பு தெரிவிச்சாங்கன்னு தெரிஞ்சுக்க ஆவல் :-) அப்பறம் ஆர்யாவும் ஜெய்ராமும் எதிர்த்தவர்கள் எங்கே???!! ஹி...ஹி..ஹி.. கோர்த்துவிட்டாச்சு.

 பாட்டு கேட்க

, ,

80 comments:

  1. வணக்கம் அக்கா,
    கொல வெறிப் பாடலை ரொம்பத் தான் ரசிச்சிருக்கிறீங்க.

    என்ன ஒரு விளக்கம், அதற்குள் சர்ச்சையை ஏற்படுத்திய on behalf இற்கும் செம கடி!

    ஹே...ஹே...

    ReplyDelete
  2. வணக்கம் மேடம் ...
    கொலைவெறி கொலைவெறி தான் ..
    இறுதியில் கேட்டிருக்கும் கேள்வி சுறுக்...

    இன்னைக்கு எதிர்த்து எதற்கு எதிர்த்தோம் என்று தெரியாமல் நாளைக்கே மறந்து விடும் தன்மை தமிழருக்கு கொஞ்சம் அதிகமா இருக்கும் ...

    ReplyDelete
  3. வணக்கம் ஆமீனா!
    ஹி ஹி பாட்ட ரெம்பத்தான் ரசித்திருக்கீங்க..

    நீங்க சொன்னதபோல குத்துப்பாட்டுக்கள் நிக்காது இத இப்பிடியே விடுவோம்..

    பழைய பாட்டுக்களும் மெலோடி பாட்டுக்களும் காலத்தால் அழியாதவை..

    ReplyDelete
  4. தம்பி நிரூ

    //வணக்கம் அக்கா,
    கொல வெறிப் பாடலை ரொம்பத் தான் ரசிச்சிருக்கிறீங்க.

    என்ன ஒரு விளக்கம், அதற்குள் சர்ச்சையை ஏற்படுத்திய on behalf இற்கும் செம கடி!

    ஹே...ஹே...//

    ஏதோ நம்மால முடிஞ்சது ஹி...ஹி..ஹி...

    ReplyDelete
  5. @அரசன்

    //
    இன்னைக்கு எதிர்த்து எதற்கு எதிர்த்தோம் என்று தெரியாமல் நாளைக்கே மறந்து விடும் தன்மை தமிழருக்கு கொஞ்சம் அதிகமா இருக்கும் ...///

    இது என்னவோ உண்மை தான் சகோ. எல்லாத்தையும் ஞாபகத்துல வச்சுக்குற ஜென்மமா இருந்தா என்னைக்கோ அரசியலில் சரியான ஆளை முதலமைச்சரா ஆக்கியிருப்போம். :-(

    ReplyDelete
  6. @சகோ காட்டான்

    //வணக்கம் ஆமீனா!
    ஹி ஹி பாட்ட ரெம்பத்தான் ரசித்திருக்கீங்க..

    நீங்க சொன்னதபோல குத்துப்பாட்டுக்கள் நிக்காது இத இப்பிடியே விடுவோம்..

    பழைய பாட்டுக்களும் மெலோடி பாட்டுக்களும் காலத்தால் அழியாதவை..//

    அதுனால தான் யாராச்சும் இந்த பாட்டுக்கு கோயில் கட்டி பதிவு போட்டாலும் கன்னாபின்னான்னு எதிர்த்து கமென்ட்போட்டாலும் சிரிச்சுட்டு போய்ட்டிருக்கேன்... சில்லரைக்கும் ஆகாத விஷயத்த வச்சு ஏன் எனர்ஜிய வீணடிப்பானேன்?? இருக்குற வரைக்கும் ரசிக்க வேண்டியது தான்! ;-)

    ReplyDelete
  7. ஆனால் ஒன்னு மட்டும் நல்லாவே புரியுது உங்க எழுத்தில், அது நீங்க கொலைவெறியா இருக்குறதை சொல்லுது ஹி ஹி...!!!

    ReplyDelete
  8. நான் இசையை மட்டும் ரசித்தேன்...!!!

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும்

    ஒய் திஸ் கொலவெறி சகோ.?

    நேத்து தான் எங்க ஆபிஸ்ல உள்ள வடநாட்டுக்காரருக்கு இந்த பாட்டை போட்டு காட்டுனேன். அதை பாத்துட்டு அவரும் அந்த பாட்டுக்கு ரசிகராயிட்டாராம். இப்ப அந்த பாட்டை மனப்பாடம் பண்ணிட்டு இருக்கார்.

    ஸோ, தெற்கையும், வடக்கையும் ஒன்றிணைச்சிருக்கு இந்த தமிழ் (அல்லது இங்கிலீஷ்) பாட்டு...

    :) :) :)

    ReplyDelete
  10. எல்லாம் ஒரு நேரம் தான்.

    ReplyDelete
  11. read ur post-u
    great writing-u
    just like that-u
    i am putting-u
    comment-u

    ReplyDelete
  12. கொல வெறி, கொல வெறி

    ReplyDelete
  13. கொலவெறி பாட்டை நானும் கொஞ்ச நாள் முன்னாடி தான் கேட்டேன்.

    இப்ப இந்த எதிர்பாட்டை கேளுங்க..

    http://www.youtube.com/watch?v=U1d3dKGb3Eg

    நோ கமெண்ட்ஸ்...

    ReplyDelete
  14. மாத்தியோசி : பழமையிலேயே புதுமை கண்ட இஸ்லாம்- பாகம்-2

    http://shayan2613.blogspot.com/2011/11/2_29.html

    ReplyDelete
  15. சினிமா பதிவை எனக்கு தராததற்கு வன்மையான கண்டனங்கள் (ஹீ ஹீ )

    ReplyDelete
  16. வாசகர்களின் கனிவான பார்வைக்கு !

    இஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும், உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும், பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,

    இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன.

    "அமைதிக்காலங்களில் தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப்படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்"

    சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

    1. ***** திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக்கும் மிருகங்கள். அவசியம் படியுங்கள். *****


    2. தினமலம்(ர்?) திருகுதாள திருவிளையாடல் தோலுரிக்கப்படுகிறது! தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக ஊளையிடும் தினமலர்.”ஆர்.எஸ்.எஸ். “ ன் ஊதுகுழலாக பார்ப்பன வன்மத்துடன் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக பகிரங்கமாக செயல்படும் ஆரிய வந்தேறி தினமல கூட்டம். தினமலரின் இஸ்லாமிய வெறுப்பு தோலுரிக்கப்படுகிறது விடியோ காணவும்


    .

    ReplyDelete
  17. கொலவெறி பாட்டு செம ஹிட்டு.

    ReplyDelete
  18. இந்த வரிக்கே எல்லாரும் தலமுடிய பிச்சுட்டு அலையலாம்//

    -:)

    Appam Mottai thaan...

    ReplyDelete
  19. இன்னும் அந்த பாட்ட முழுசா கேட்கல

    ReplyDelete
  20. இன்னும் அந்த பாட்ட முழுசா கேட்கல

    ReplyDelete
  21. குட்டி சுவர்கத்திற்கு என் முதல் வணக்கம் தலைப்பு பார்த்து தளத்திற்கு வந்தேன்..கொலவெறியைப் பற்றி நன்றாக சொல்லியிருந்தீர்கள்..அப்படியே நம்ம தளத்திற்கும் வந்துட்டுப் போங்க என்னோட 'ஐய்யயோ கொலவெறி' யை பாத்துட்டு போங்க..

    ReplyDelete
  22. Romba sumarana pattu thaan.. ethukku ellarum ippadi kondadarangannu theriyala..

    ReplyDelete
  23. ஹெட்போனுடன் கம்பியூட்டர் முன் அழக்காக போஸ் கொடுக்கும் வருங்கால சூப்பர் ஸ்டார் தன்வீர் ஷாமுக்கு எனது வாழ்த்துகள். இப்படி அழகான பையன் போட்டோவை போட்டு சிறு பொண்ணுகளை மனதை நோக வைத்து தூக்கம் இழக்க வைத்தற்காக பல சிறு பொண்கள் கொலைவெறியோடு அழைவதாக செய்தி. பார்த்து பாதுகாப்பாக இருந்துகோங்க ஆமினா அம்மா

    ReplyDelete
  24. உங்கள் பையன் இருக்கும் ரூமை பார்க்கும் போது எனது உறவினர்கள் வீடு போல இருக்கிறது. திருநெல்வேலியில் எடுத்தாதா?

    ReplyDelete
  25. @நாஞ்சில் மனோ
    //ஆனால் ஒன்னு மட்டும் நல்லாவே புரியுது உங்க எழுத்தில், அது நீங்க கொலைவெறியா இருக்குறதை சொல்லுது ஹி ஹி...!!!//

    ஹி...ஹி...ஹி...
    சத்தியமா அப்படியெல்லாம் இல்ல மக்கா... நம்புங்க...

    ReplyDelete
  26. நான் இசையை மட்டும் ரசித்தேன்...!!!//

    யோ பாய்ஸ்ன்னு ஆரம்பிக்கும் போது செம கடுப்பாகி இந்த பாட்டுக்கா இத்தன வரவேற்புன்னு பாட்ட கேக்காமலேயே ஓடிட்டேன். அதுக்கப்பறமும் என்ன தான் இருக்குன்னு பொருமையா கேக்கும் போது அந்த கொலவெறி என ஆரம்பிக்கும் முன் வரும் மியூசிக் காந்தம் மாதிரி இழுத்துச்சு... நல்லா பண்ணியிருக்கார் இசையமைப்பாளர். புது ஆள்ன்னு நம்ப முடியல. ஜீவியை தூக்கிடுவார்ன்னு நெனைக்கிறேன் :-)

    ReplyDelete
  27. @சகோ பாசித்
    //அஸ்ஸலாமு அலைக்கும்

    ஒய் திஸ் கொலவெறி சகோ.?

    நேத்து தான் எங்க ஆபிஸ்ல உள்ள வடநாட்டுக்காரருக்கு இந்த பாட்டை போட்டு காட்டுனேன். அதை பாத்துட்டு அவரும் அந்த பாட்டுக்கு ரசிகராயிட்டாராம். இப்ப அந்த பாட்டை மனப்பாடம் பண்ணிட்டு இருக்கார்.

    ஸோ, தெற்கையும், வடக்கையும் ஒன்றிணைச்சிருக்கு இந்த தமிழ் (அல்லது இங்கிலீஷ்) பாட்டு...

    :) :) :)//

    வ அலைக்கும் சலாம் வரஹ்...

    ரொம்ப வேகமா தான் பரவுது சகோ... தமிழும் இல்ல இங்க்லீஸும் இல்ல.. தமிங்கலம் :-)

    ReplyDelete
  28. @அமுதா
    //எல்லாம் ஒரு நேரம் தான்.//
    அது என்னவோ உண்மை தான் :-)

    ReplyDelete
  29. @சூர்ய ஜீவா

    //read ur post-u
    great writing-u
    just like that-u
    i am putting-u
    comment-u//

    ஹி...ஹி...ஹி...
    thanks-u brother-u :-)

    ReplyDelete
  30. @எனக்கு பிடித்தவை
    //கொல வெறி, கொல வெறி//

    :-)
    வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி தோழி

    ReplyDelete
  31. @ஆசியா

    //கொலவெறி பாட்டை நானும் கொஞ்ச நாள் முன்னாடி தான் கேட்டேன்.

    இப்ப இந்த எதிர்பாட்டை கேளுங்க..

    http://www.youtube.com/watch?v=U1d3dKGb3Eg

    நோ கமெண்ட்ஸ்...//

    இந்த பாட்ட கேட்டதுக்கு பொறவுதேன் செம வெறில இருக்கேன் ;-) இதை விட NDTV ல கலைஞர், அம்மா பொம்மைகள வச்சு இந்த பாட்ட அவங்களுக்கு ஏத்த மாதிரி அமைச்சுருக்காங்க...... கொடுமை தான் :-)

    ReplyDelete
  32. @வரோ

    மாத்தியோசி : பழமையிலேயே புதுமை கண்ட இஸ்லாம்- பாகம்-2

    http://shayan2613.blogspot.com/2011/11/2_29.html//

    நன்றி சகோ

    ReplyDelete
  33. @வாஞ்சூர் அப்பா

    பகிர்வுக்கு மிக்க நன்றி அப்பா

    ReplyDelete
  34. ரெவரி

    //இந்த வரிக்கே எல்லாரும் தலமுடிய பிச்சுட்டு அலையலாம்//

    -:)

    Appam Mottai thaan...//
    இல்லாரும் இது பத்தியே யோசிக்கிறது பாத்தா அப்படி தான் ஆகும்னு தெரியுது :-)

    ReplyDelete
  35. சுல்தான்

    //Salaam....
    No comments...//

    வ அலைக்கும் சலாம் வரஹ்...
    நீங்க இன்னும் ப்ளாக் ஆரம்பிக்கலையா :-(

    ReplyDelete
  36. @சகோ தாரிஹ்

    //இன்னும் அந்த பாட்ட முழுசா கேட்கல//

    என்ன இப்படி சொல்லிட்டீங்க??? அப்பறம் யாரும் உங்கள மதிக்கமாட்டாங்க சகோ.... :-) :-) :-)

    ReplyDelete
  37. @மதுமதி

    //குட்டி சுவர்கத்திற்கு என் முதல் வணக்கம் தலைப்பு பார்த்து தளத்திற்கு வந்தேன்..கொலவெறியைப் பற்றி நன்றாக சொல்லியிருந்தீர்கள்..அப்படியே நம்ம தளத்திற்கும் வந்துட்டுப் போங்க என்னோட 'ஐய்யயோ கொலவெறி' யை பாத்துட்டு போங்க..//

    வாங்க மதுமதி
    நீங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம். உங்க கொலவெறியும் படிச்சேன். நேரம் கிடைக்கும் போது விரிவா பின்னூட்டமிடுகிறேன்

    ReplyDelete
  38. @பதிவுலகில் பாபு
    //Romba sumarana pattu thaan.. ethukku ellarum ippadi kondadarangannu theriyala..//

    :-)

    இந்தியாவில் நிறைய பேரு யூத்தாமே? :-) அதுனாலையாக கூட இருக்க்லாம்!

    ReplyDelete
  39. @அவர்கள் உண்மைகள்

    பாதுகாப்பாக இருந்துகோங்க ஆமினா அம்மா//

    :-)

    போட்டோ எங்க வீட்டு பால்கனியில் எடுத்தது சகோ..

    ReplyDelete
  40. // "நிச்சயமாக தெலுங்கு ரசிகர்களைத்தான் எனக்கு பிடிக்கும்... தெலுங்கு ரசிகர்கள் தான் ஒவ்வொரு சீனுக்கும், ஒவ்வொரு பிரேமுக்கும் கை தட்டி, விசிலடிச்சு ரசிக்கிறாங்க.. ஆனால் தமிழ் ரசிகர்கள் அப்படி இல்லை.. "//

    நீங்களுமா? தமிழ் நாட்டு ரசிகர்கள் அப்புடி இல்லன்னு அவரு சொல்லலியே, தமிழ் நாட்டுல எனக்கு இப்படி ஒரு கைதட்டல் கெடைச்சது இல்லன்னுதானே சொன்னாரு... எதோ நமக்கு புரிஞ்ச தெலுங்கு அவ்வளவுதாங்க...

    ReplyDelete
  41. இந்த ஒரு பட்டால நான் படுற அவஸ்த இருக்கே, அத ஒரு தனி பதிவா போடலாம்ன்னு இருக்கேன்..

    ReplyDelete
  42. nice
    pls visit my blog
    mydreamonhome.blogspot.com

    ReplyDelete
  43. ஆமி நீயுமா? நானும்கூடதான்.அவ்வ்வ்
    இன்னிக்கு என்பேரன் போன்பன்ரான் பாட்டி கொலவெறின்னா என்ன மீனிங்குன்னு. அவன்மும்பையிலே பிறந்து வளர்ந்தபிள்ளை இப்பகாலேஜ்படிக்கும் 18-வயசு பிள்ளை.
    வயசு வித்யாசமில்லாம எல்லாரையும் முணூமுணுக்க வச்சிருக்கு கொலவெறி

    ReplyDelete
  44. எழுத்துக் கூட்டி வாசிச்சி முடிக்க அர மணி நேரம் ஆகிரிச்சி. எப்பிடிங்க எல்லாம் தமிழ்ல டைப் பண்றது...என்ன மாதிரி ஏதாச்சும் ஈசியா இங்கிலிஸ்ல கோப்பி பண்ணி போடறதே போதும்னு ஆகிப் போகுது.

    Well, கருத்துத் தெரிவிக்கிற அளவுக்குப் பெரிய ஆள் இல்ல நான். பட், இது ஜஸ்ட ஒரு பாட்டுங்க.வித்தியாசமா ஒருத்தர் ட்ரை பண்ணி இருக்குறாரு. ஒலகமே ஹை டேக் ல முன்னேறி போயிட்டிருக்கும்போது, இது என்னங்க? உண்மையா சொன்ன, அந்த ஆசாமிகள் ஆங்கிலப் பாட்டே கேட்டதில்லையோ? என்ன கொல வெறி இது? இந்த மாதிரி தமிழ் ப்ளாக் பக்கம் வந்தாத்தான் ஊரு விவகாரம் எல்லாம் தெரிய வருது.

    ரொம்ப நல்ல பதிவு. தொடர்ச்சியாக எழுதுங்கள். ஒரு நாளைக்கு ஒரு பதிவு எழுதினால், உண்மையிலேயே நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  45. இங்கேயும் ஒரு கொலைவெறி யா?

    இந்த பாடலுக்கு இந்த அளவுக்கு எந்த பதிவர்களுக் விளக்கம் கொடுக்கல

    ReplyDelete
  46. எது எப்படியோ....
    இசை கவருது....
    தனுஷ் வொய்ஸ் நல்லா பொருந்துது....
    பாட்டை ரசிக்கலாம்....இல்லையா ஆமினா.....

    ReplyDelete
  47. @வரோ

    //சினிமா பதிவை எனக்கு தராததற்கு வன்மையான கண்டனங்கள் (ஹீ ஹீ )//

    திஸ் இஸ் கொலவெறி ஹி...ஹி...ஹி...

    ReplyDelete
  48. @சகோ Dr. Butti Paul

    நீங்களுமா? தமிழ் நாட்டு ரசிகர்கள் அப்புடி இல்லன்னு அவரு சொல்லலியே, தமிழ் நாட்டுல எனக்கு இப்படி ஒரு கைதட்டல் கெடைச்சது இல்லன்னுதானே சொன்னாரு... எதோ நமக்கு புரிஞ்ச தெலுங்கு அவ்வளவுதாங்க...//

    அடடா.... நா தான் ஆராயாம போட்டுட்டேன்.

    ரசிகர்களை பத்தி கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் ரசிகர்களை சேராதா :-) இது இன்னும் கொடுமை. ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மானத்தையே கப்பலேத்திட்டார் ஹி...ஹி...ஹி...

    எடுங்கப்பா உருவ பொம்மையை.... ;-)

    ReplyDelete
  49. @வினோத்

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  50. மாமி

    இன்னும் எங்க ஊர்ல யாருக்கும் தெரியல மாமி... இல்லைன்னா எல்லா கல்யாண மஹால்லையும் போட்டு கொன்டு எடுத்துடுவானுங்க! :-(

    ReplyDelete
  51. @சகோ jiff0777

    நீங்க நிதானமா படிச்சாலே அர மணி நேரம் ஆகிடும் சகோ :-)

    நீங்க இன்னும் தமிழ்ல எழுதல. இல்லைன்னா காப்பி பேஸ்ட் பதிவர் என அனைவராலும் வெறுப்போடு அழைக்கப்படுவீர்கள் :-)

    ஒரு நாளைக்கு ஒரு பதிவா???????? ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கஷ்ட்டம். நமகிட்ட அந்த அளவுக்கு சரக்கில்ல சகோ

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  52. @பர்கான்

    //இங்கேயும் ஒரு கொலைவெறி யா?

    இந்த பாடலுக்கு இந்த அளவுக்கு எந்த பதிவர்களுக் விளக்கம் கொடுக்கல//

    அக்காவ திட்டல தானே :-)

    வருகைக்கு நன்றி தம்பி

    ReplyDelete
  53. @நிகாஷா

    //எது எப்படியோ....
    இசை கவருது....
    தனுஷ் வொய்ஸ் நல்லா பொருந்துது....
    பாட்டை ரசிக்கலாம்....இல்லையா ஆமினா.....///

    ஆயிரத்தில் ஒருவன்ல "ஒன் மேல ஆசதான்" பாட்டுலையே செமையா கலக்குன வாய்ஸ் ஆச்சே... குத்து,வெஸ்ட்டர்ன் மியூசிக் ஓட நல்லா ஒத்து போகுது. அதுவும் லோக்கல் பாசை, பேச்சு வழக்கு பாட்டு நல்லா செட் ஆகுது நிகாசா

    இசைக்கு தான் எல்லோரின் முதல் பாராட்டுன்னு நெனைக்கிறேன் :-)

    வருகைக்கு நன்றி நிகாஷா

    ReplyDelete
  54. இது தமிழிங்கிலீஸ்...சாய்ஸ்ல விடுங்க. மியூஸிக் நல்லாயிருக்கு.இப்போ வருகிற எல்லா பாடல்களும் கிட்டத்தட்ட வந்த வேகத்தில் காணாம போயிடும்.

    ReplyDelete
  55. வணக்கம், புதியதோர் மகளிர் திரட்டி... புதிய முயற்சி.. உங்களின் அதரவு தேவை...

    மங்கையர் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...
    நீங்கள் வலைப்பூவில் அல்லது இணையத்தளத்தில் எழுதும் மங்கையரா...?
    உங்கள் வலைப்பூ/இணையத்தளம் மகளிருக்கு பயனளிக் கூடியதா?
    உங்கள் பதிவுகளை இன்றே இங்கு இணைத்துக்கொளுங்கள்..

    ReplyDelete
  56. ஆக இந்த படம் ரிலீஸ் ஆவுறதுக்குள்ள பட்டி தொட்டிலாம் இங்க்லீஸ் பரவி குப்பைதொட்டிக்கு தமிழ் போய்டும். ஜெட்டு வேகத்துல சாவுதய்யா டமில்

    சரியா சொன்னீங்க..

    ReplyDelete
  57. ///oh god-u...... she is dead now-u. i am happy how-u???/// அட கொலவெறி ஆமினாவையும் கவிஞரா மாத்திருக்கு... சபாஷ்... சரியானா போட்டி..
    start-u your song-u song-u
    naga your fan-u :-)

    ReplyDelete
  58. சகோ ....
    எதை நோக்கி பயணிக்கிறீர்கள் என்று தெரியவில்லை ....

    ReplyDelete
  59. @விச்சு

    கண்டிப்பா காணாம தான் சகோ போகும்...

    ReplyDelete
  60. @மங்கையர் உலகம்

    முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  61. @மதுமதி

    சரியா சொன்னீங்க..//

    மிக்க நன்றி சகோ மதுமதி

    ReplyDelete
  62. @நாகா

    /////oh god-u...... she is dead now-u. i am happy how-u???/// அட கொலவெறி ஆமினாவையும் கவிஞரா மாத்திருக்கு... சபாஷ்... சரியானா போட்டி..
    start-u your song-u song-u
    naga your fan-u :-)//

    ஹா...ஹா...ஹா...

    அப்ப சீக்கிரமே சினிமால எழுத ட்ரை பண்ணலாம்னு சொல்றீங்க :-)

    ReplyDelete
  63. @சகோ சுல்தான்

    //சகோ ....
    எதை நோக்கி பயணிக்கிறீர்கள் என்று தெரியவில்லை ....//

    மனதில் தோன்றும் நொடி பொழுது எண்ணங்களை எழுத்தில் கொண்டு வருவதற்கு எதை நோக்கியும் பயணிக்க வேண்டிய அவசியம் இல்லையே சகோ.... :-)

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  64. தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

    தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

    இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
    please go to visit this link. thank you.

    ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

    கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

    போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

    ReplyDelete
  65. please join again tm & add tamilmanam vote pattai

    ReplyDelete
  66. கொலைவெறி பதிவா???? ஹீ ஹீ.... ஜோக் அக்கா.... செம பாட்டு இல்ல....
    உங்கள் எழுத்து நடை அழகா இருக்கு அக்கா...... தெளிந்த நீரோடை போல் இருக்கு உங்க எழுத்து. ரெம்ப ரசிச்சேன்.... எழுத்தில் ஈர்ப்பும் அதிகம்.... வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete
  67. முக்கால் தமிழை முழுங்கி எத்தனையோ பாடல்கள் வந்துள்ளன..
    ஆனால், அவற்றில் பலவற்றை யாரும் எதிர்க்கவில்லை!!

    "Why this கொலவெறி" பாடலை மட்டும், பலர் Why this கொலவெறியோடு எதிர்க்கிறனர்?

    ReplyDelete
  68. * இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.

    * பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.

    * நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.

    * இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!. please go to visit this link. thank you.

    * தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

    * தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

    * இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
    please go to visit this link. thank you.

    * ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

    * கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

    ReplyDelete
  69. அச்சோ....கொலைவெறிப்பாட்டுக்குப் பதிவே போட்டாச்சா.அதுவும் ஆமினா !

    ReplyDelete
  70. @சகோ ரப்பானி
    எனக்கு விருப்பமில்லை சகோ.

    ReplyDelete
  71. @துஷ்யந்தன்

    எல்லாம் எழுத்தாளர் துஷி தம்பி கூட பழகுறதுனால வந்த எப்பெக்ட்டா இருக்குமோ :-)

    ReplyDelete
  72. @ஆளுங்க

    ஆமா சகோ... எதிர்ப்பவர்களுக்கு சமமா ஆதரவாளர்களும் இருக்காங்க :-)

    ReplyDelete
  73. @ஹேமா
    என்ன செய்ய? ஹி..ஹி...ஹி...

    ReplyDelete
  74. ஃஃஃஃஃஇந்த வரிக்கே எல்லாரும் தலமுடிய பிச்சுட்டு அலையலாம். ச்சச்ச... பைத்தியமா இல்ல...ஃஃஃஃ

    அதை ரசனை மிஞ்சுதே... யாரைப்பார்தாலும் அதே மாதிரித் தானே தலையாட்டுறாங்க...

    என் மருமகன் தொல்லை தாங்க முடியல...

    ReplyDelete
  75. என்னே ஒரு விளக்கம்..கலக்கிட்டீங்க!

    ReplyDelete
  76. சிம்புவை நக்கல் அடித்து எடுக்கப்பட்ட பாட்டு. அது பலருக்கு தெரியவில்லை. அம்மா கூட 'என்ன கருமண்டா இது. கொலவெறின்னு' கத்துனாங்க. ஸ்டில் ஐ லைக் இட்!!

    ReplyDelete
  77. ஒய் திஸ் கொலை வெறி? ஹி ஹி

    ReplyDelete
  78. why this kolaveri u....
    blog u.. you blog u..
    tamil u... thimilu...u
    nice.u... review...u..
    share..u....thank..u.....

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)