மர்மக் கோட்டை
பாகம்-3
ரெண்டு ஃப்ரெண்ட்ஸ். ரெம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். எப்பவுமே ஒன்னாவே சுத்துவாங்க, காலார நடந்து ஊரைக்கடந்து ஊருக்கு வெளியே அந்த NH சாலை யின் பாலத்தில் ஓரத்தில் அமர்ந்து ரெம்ப நேரமா அரட்டை அடிச்சுட்டு இருட்டியவுடன் வீடுதிரும்பவுது பொழுதுபோக்காக வச்சுருந்தாங்க.ஒருவன் சைலன் மற்றவன் தருனா.சைலன் க்கு மும்பையிலிருந்து அப்பாய்ன்மெண்ட் ஆர்டர் வந்தது, தருனா சைலனை ரயிவேஸ்டேஷன் வரை போய் Send-Off பண்ணிட்டு வந்தான். இதெல்லாம் நடந்து ஒர் வாரம் கழிச்சு...நள்ளிரவு 1 மணிக்கு சொந்த ஊரில் உள்ள ரயில்வேஸ்டேஷனில் மீண்டும் வந்து இறங்கினான் சைலன். போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. அதுனால வீட்டுக்கு நடந்து வருவதை தவிர வேறு வழியில்லை. வரும் வழியில் மரங்களும் செடிகளும் இருட்டுக்குள் ஒழிந்து ஊதக்காத்தை ஊதிக் கொண்டிருந்தது. ஆள்நடமாட்டம் எதுவும் இல்லை. கும்மிருட்டு வேற, பீதிய
கிளப்புறமாதிரியான சூழலும் நேரமும் சேர்ந்து கொண்டது அந்த பகுதியில்.

, ,



மர்மக் கோட்டை
பாகம்-2
 முதல் பாகம் காண

தூக்குல தொங்கிட்டாரு அந்த ஸ்கூல் வாத்தியார் அந்த லெட்டர் படிச்சவுடனே!!! அப்படி என்னதான் அந்த லெட்டர்ல? அப்படினு அவர் மனைவி அத படிச்சிருக்காங்க. உடனே அவங்களுக்கு பைத்தியம் புடிச்சிருச்சு!. அந்தலெட்டர் அப்படியே ஒரு மளிகை கடைக்காரர் கைக்கு போயிருக்கு அதை படிச்ச அந்த மளிகை உடனே கடைய காலி பண்ணிட்டு ஊரைவிட்டு ஓடிருச்சு. அடுத்து அந்த மளிகையோட மனைவி கையில் அந்த லெட்டர் கிடைச்சிருக்கு. மனைவி அந்த லெட்டரை படிக்க விரிக்கும் அந்த நொடியில் காலிங்க் பெல் கூப்பிட்டது உடனே அதை கிச்சன்லேயே வச்சுட்டு யார்னு பார்க்க போய்ட்டு திரும்பி லெட்டர படிக்க வரும்போது அந்த லட்டர் பறந்து போயி அடுப்புல விழுந்து அழிஞ்சு போச்சு. கடைசிவரை அதுல என்ன இருக்குனு ஆமினாவுக்கு தெரியாமலே போயிருச்சு. அதுனால உங்களுக்கும் அதை என்னால சொல்லமுடியல :-(  சோ மர்மமா இருக்கிற எந்த ஒரு விஷயமும் சுவராஸ்யம்தான்...சரி அந்த பூல் புலையா பாதில விட்டேன்ல?! அதை சொல்றேன் கேளுங்க...

, , ,

பெண்கள் மனச வெளிபடுத்தும் பாட்டு, அதுவும் பெண் பாடுன பாட்டு, அதுவும் பெண் வாய்ஸ்லேயே இருக்குற பாட்டு, அதுவும் பத்து பாட்டு சொல்லணுமாம். நம்மளையும் தொடர்பதிவுக்கு கூப்பிட்டுருந்தாங்க. நம்மல பத்தி தான் எல்லாருக்கும் தெரியுமே ரொம்ப நல்லவன்னு (போதும் போதும் நிப்பாட்டு.....எவ்வளவு நாளாதான் இதையே சொல்லி எங்கள ஏமாத்துவ) பாட்டு செலக்ட் பண்றதுல ஒன்னும் சிரமம் இருக்கல. அதெல்லாம் 5 மணி நேரத்துல 50 பாட்டு எடுத்தாச்சு. அதுல இருந்து இந்த பாட்டுலாம் எடுக்குறதுக்குள்ள தான் பெரியபாடா போச்சு (இதுக்காகவே மறுபடியும் 2 முறை சாப்பிட்டு தெம்ப ஏத்திக்கிட்டேனா பாத்துக்கோங்களேன்).

,

  மர்மக் கோட்டை
பாகம்-1
                       ரெண்டு டப்பா இருக்கிறது ஒரு டப்பாவில் பொற்காசுகள், வெள்ளிக்காசுகள் என நிரப்பபட்டு திறந்த நிலையில் இருக்கிறது, மற்றொன்று மூடியே வைக்கப்பட்டுள்ளது அதனுள் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. இந்நிலையில் பொற்காசுகள் இருந்தும் கூட அதை விடுத்து, மூடிய டப்பாவில் என்ன இருக்கிறது என்பதை அறியவே நம் மனசு அலைபாயும் அப்படினு அந்தா.. அவரு சொன்னாரு (யாருன்னுல்லாம் கேட்க கூடாது). அதுனால ரகசியமாக இருக்கிற எந்த ஒரு விஷயமும் சுவராஸ்யம்தான்..அதை அறியவே எப்போதும் ஆர்வமா இருப்போம்

,

அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள். எல்லார் வாழ்விலும் இன்பம் கிடைத்திடவும், அதுவே நிலைபெறவும் எல்லாம்  வல்ல அல்லாஹ் துணைபுரிவானாக....


தமிழக அரசின் நிறுவனம் அதாவது அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் 2 நாளைக்கு முன்னாடி ஒரு அறிவிப்பு கொடுத்தது. அதை எல்லாரும் படிச்சுருப்பீங்கன்னு நெனைக்கிறேன். படிக்காதவங்களுக்காகவே அல்லது நியூஸ் பேப்பர் பக்கமே போவதில்லை என சொல்லும் சகோக்களுக்காக இந்த பதிவு. (சட்டுபுட்டுன்னு மேட்டருக்கு வா. )


என்ன விஷயம் தெரியுமா? அரபு நாடுகளில் உள்ள பல பெரியகம்பெனி மற்றும் முன்னணி கம்பெனிகளுக்கு வேலை செய்ய ஆள் இல்லையாம். அதுனால வேலைஆட்கள் வேண்டுமாம். ஆனாலும் எல்லாரும் போய்விட முடியாது. சில தகுதிகள் வேண்டும்.கீழே படிங்க புரியும்

, ,


என்ன கொடுமை பாத்தீங்களா? ரகசிய காமிரா வச்சு லாட்ஜ்,டிரஸ்ஸிங் ரூம்......இந்த மாதிரி இடத்துல தான் வச்சு வக்கிர புத்திக்காரங்க வீடியோ எடுத்தாங்க. இப்ப கதையே வேற! ஹாஸ்பிட்டல்ல வச்சு எடுக்க ஆரம்பிச்சுட்டானுங்க. கடவுளுக்கு அடுத்தப்படியா இருக்கும் டாக்டரே அதுவும் பெண் மருத்துவரே இந்த மாதிரி ரகசிய காமிரா மூலம் தன் மருத்துவமனைக்கு வரும் பெண்களை வீடியோ எடுத்துருக்காங்க.

சென்னை ஆவடிக்கு அருகிலுள்ள  பட்டாபிராம் ரயில்வே கேட்டுக்கு பக்கத்துல இருக்குற கிரேஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் தான் இந்த வக்கிர செயலை செய்தது. அதுவும் இந்த ஹாஸ்பிட்டல் பிரசவத்துக்கு பெயர் போன இடம்.



இந்த மாதிரி மருத்துவமனைகள் அதுவும் குறிப்பாக லேடி டாக்டர் என்பதால் தான் பலரும் நம்பி போறாங்க. ஆனா அந்த நாய்ங்க ஒட்டுமொத்த ஹாஸ்பிட்டல் மேலேயே சந்தேகம் வர அளவுக்கு நடந்துகிட்டானுங்க. அந்த ஹாஸ்பிட்டலில் இருக்கும் நர்ஸ்,லேப்,டெக்னீஷியன் என எல்லா ரூம்களிலும் சி.சி.டி.வி வகை காமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதுவரை என்னன்ன அட்டூழியங்கள் நடந்தது என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்.

இத்தனைக்கும் இந்த மருத்துவமனையின் எம் டி  மற்றும் மகப்பேரு

, ,




எனக்கு வந்த தகவலை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ளவே இந்த பதிவு!யாருக்காவது வேலை தேவை என்றாலும், வேலை இல்லாதவர்களுக்கும் தயவு செய்து இதை தெரியப்படுத்தி பயன் பெற உதவவும் !!!

, ,


சின்ன சின்ன பிரச்சனைகளில் சில்லரை பிரச்சனையும் ஒன்று. Bata செருப்புக்காரன் விலை வைப்பான் பாருங்க ரூபாய் 299.95னு அதாவாது 300 இல்லையாம். 300ரூபாய்னு சொன்னா விலை அதிகமா தெரிஞ்சுருமாம் அதுனால அவரு ரூ299.95. அதுக்கு அப்பறம்  சில்லரைக்கும் கண்டக்டருக்கும் எப்பவுமே ஏழரைதான். பஸ்ஸுல ஏறும் போதே கண்டெக்டர் குரல் கொடுப்பார். சில்லரைய ரெடியா வச்சுக்கோன்னு. அவர் பையில ஏற்கனவே தலைவர் வச்சுருப்பார். ஆனா எடுத்து கொடுக்க அலுப்பு. கொஞ்சம் கொஞ்சமா ஒவ்வொருத்தவங்க கிட்ட வம்படியாய் மிச்சம் செய்த பணத்தில் அடுத்த ஒரு வருஷத்தில் ஒரு ட்ராவல்ஸ்க்கு ஓனராவே ஆகிடுவார் :)

, ,

அந்தா இந்தான்னு நாட்கள் ஓடி போய் எல்லோரும் ஆவலாய் எதிர்பார்த்த  தீபாவளியும் வந்தாச்சு!


உலகம் முழுவதும் வேலைக்காக காத்திருப்போர் பட்டியல் நீளுதுன்னா அதை விட வேலையை கையிலேயே வச்சுட்டு ஆட்களை தேடும் கம்பெனிகளின் பட்டியலும் நீண்டுகிட்டு தான் இருக்கு.

டிஸ்கி: எதுக்கு இவ்வளவு நீளமா நீட்டிகிட்டே இருக்க. மேட்டருக்கு வா அம்மணி

சுருக்கமா தான் எப்போவும் பேச தெரியாதே.ம்ம் சரி இதை கேளுங்க. இப்பலாம் ஆமிக்கு நல்ல நல்ல எண்ணங்களா வருது. அதுனால நல்ல நல்ல விஷயங்களாம் செய்யலாம்னு முடிவு பண்ணி சில காரியங்கள எறங்க போகுது.

இன்னைக்கு எனக்கு தமிழ் பத்தி கொஞ்சம் ஞாபகப்படுத்திக்கொள்ளலாம்னு திடீர்னு ஒரு ஆசை வந்துச்சு. ஆமா திடீர்னுதான் :)) சத்தியமா திடீர்ன்னு தான்!
அன்னிய நாட்டு மோகத்தில் இப்பெல்லாம் திடீர் திடீர்னுதான் தமிழில் பேசும் நிலை எற்பட்டுள்ளது. சில தமிழ் வார்த்தைகள் உச்சரிக்கப்பட தயக்கம் எழுகிறது. உதாரணமாக முடி என்ற சொல்லுக்கு மயிர் என்றே தமிழ் சொல்ல சொல்கிறது. ஆனால யாரையாவது பாத்து நீ முடி அப்படினு சொன்ன சும்ம முழிச்சிட்டு போயிருவாங்க. ஆனா  “.........” னு சொன்னா நம்மள முடிச்சுட்டு போயிருவாங்க. ரெண்டுக்குமே ஒரே அர்த்தம்தான்.ஆனா மயிர்எனபதுக்கு மட்டும் ஏன் பிரச்சனைனு தெரியல.
டிஸ்கி : மயிர் நீங்கின் உயிர் வாழா கவரிமான் என சொல்ல கேட்டதுண்டு. அதனால் யாரும் முகம் சுழிக்க கூடாது சொல்லிபுட்டேன். 

, ,