3 நாட்களுக்கு முன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க ஸ்டுடீயோக்கு  செல்ல நேர்ந்தது. எப்பவும் கொசு விரட்டும் அல்லது யூஸ் ஆகாத கேமராவ தொடச்சு தொடச்சே வெளுக்க வைக்கும் வேலையில் ஈடுபடும் போட்டோக்ராபர் அன்னைக்கு படுபயங்கர பிசி. கூட்டம் வாசல் வரை படர்ந்தது. எல்லாருமே கிராமத்தாளுங்க. சிலர் எங்க ஊர் பாட்டீஸ்.

"இந்த மவராசி வந்தாலே இதே பொழப்புத்தேன். அத மாத்த,இத மாத்தன்னு மனுஷ உயிர வாங்கிட்டுதேன் மறுசோலி பாக்கும்" இதான் என் காதில் முதலில் விழுந்த வாக்கியம். என்னத்துக்கு சொன்னாங்கன்னு தெரியல. ஆனா நம்ம அம்மாவ தான் இப்படி புகழ்றாங்கன்னு மட்டும் தெரிஞ்சது. பரவால்லையே பாட்டீங்க கூட அரசியல்ல பயங்கரமா கலக்க ஆரம்பிச்சுட்டாங்க..... வெயிட் பண்ற நேரத்துக்கு இதையாவது கேட்டுட்டு இருப்போம்னு ஐடியா ;-)

, ,

பரமக்குடியில் நடந்த கலவரம் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பரவி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை ஏற்கனவே போதுமான அளவு செய்திகளில் கிழிக்கப்பட்டு விட்டதால் என்னால் முடிந்தளவு சில விஷயங்களை மட்டும்..........
பள்ளிகளில் படிக்கும் காலங்களில் இந்த மாதிரி கலவரம் நடந்தா பயங்கர கொண்டாட்டமா இருக்கும். ஏன்னா கண்டிப்பா ஒரு மாசம் ஸ்கூல் இருக்காது ( அசம்பாவிதத்தால் நடந்த உயிரிழப்பும் பொருட்சேதமும் கணக்கிடும் பருவமில்லாததால் அந்த கொண்டாட்டம்). 1,2,3ன்னு ஒவ்வொரு வகுப்பா முன்னேற முன்னேற வருடா வருடம் வரும் பண்டிகை போல் எதிர்பார்க்கப்பட்ட கலவரமும் மெல்ல மெல்ல குறைஞ்சு ஒரு கட்டத்துல கலவரம்னா என்னன்னு கேள்வி கேட்கும் அளவுக்கு தான் போன வருடம் வரை நெலமை இருந்துச்சு. ஆனா இந்த வருஷம்????????..........
(சுருக்கங்க கூறின்- கிட்ட தட்ட 15 வருஷத்துக்கு முன்பு நடந்த ஜாதி கலவரத்துக்கு பின் நடந்த கலவரம் இது)

கலவரத்துக்கு ஒருவாரம் முன்பு
புதிதாய் பார்த்த வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க போன போது சாவி கொத்தை கொடுத்து வீட்டுக்கு வரும் நாளை குறிக்க காலண்டரை எடுத்தார் ஹவுஸ் ஓனர். ஒடனே நா "இல்லல்ல.... அதெல்லாம் பாக்காதீங்க........ எனக்கு அதுலலாம் நம்பிக்க இல்ல. நாயித்து கெழம குடி வந்துடுவேன்"ன்னு சொன்னதும் அந்த தாத்தா "இல்ல தாயி..... திங்க கெழம வாங்க. நாயித்து கெழம அன்னிக்கு ஊர்வலம், பேரணின்னு பரபரப்பா இருக்கும். அதுக்காக தான் எப்ப

, ,

அறுசுவையில் எழுதிய பெரிய கதை :-)


டிஸ்கி:- இது போல் உங்களுக்கோ உங்களை சார்ந்தவர்களுக்கோ இந்த கதையில் உள்ளது  போல் அனுபவம் ஏற்பட்டால்  "குட்டி சுவர்க்கம்" வலைப்பூ ஓனர் சகோ.ஆமினா நேற்று எழுதிய என் டைரியில்  --க்கு  என் அனுபவ பதிவு இது..! என்ற வரியை  சேர்க்கவும். தேவையில்லாம யாரும் பல்ப் வாங்க கூடாது பாருங்க!!!

என் வீட்டின் எதிரில் நீ குடிவந்தாய். அன்று தான் முதன் முதலாக உன்னை சந்தித்தேன். அந்த நாள் கண்டிப்பாக என் வாழ்வில் மறக்க முடியாத நாள் தான். எப்படி முடியும்? கருப்பு நாளில் நான் கண்ட திருநாள் அல்லவா அது! ஆசையாய் நான் எழுதிய பல கவிதைகள் அடங்கிய என் டைரியை என் தாத்தா வேண்டுமென்றே பழைய புத்தகங்களோடு சேர்த்து சொற்ப

, ,

ரம்ஜான் பர்சேஸ் முடிக்க நைட் ரொம்ப லேட்  ஆச்சு. ரொம்ப நேர காத்திருப்புக்கு பின் ஒருட்டில் இருந்து வந்த ஆட்டோவை வழிமறிச்சு :-) ஏறியாச்சு. நான் எந்த இடமென சொல்லாமலேயே சரியாக என் வீட்டு வாசலில் ஆட்டோ நின்றது(அந்தளவுக்கா பெரிய ஆளு?) கொடுத்த பணத்தையும் வாங்க மறுத்தார் ட்ரைவர். டபுள்  ஆச்சர்யம். ஏன் என்பது போல் நான் பார்த்த பார்வையை பார்த்து
"என்னை ஞாபகம் இல்லையா? கலீல்!!" என சொன்னதும் சடன் ப்ரேக் போட்டது போல கொஞ்சம் ஆடி அப்பறம் ஸ்டெடி ஆனேன்.

, ,


இப்படியொரு பதிவு போட ரொம்ப வருத்தமா தான் இருக்கு. இன்னைக்கு விட்டா இனி அடுத்த வருஷம் தான் சொல்ல முடியும். கெட்ட விஷயத்த ஏன் தள்ளி போடுவானே? அதான் இன்னைக்கு சொல்லிடுறேன். பையனின் படிப்பு குறித்து பேச வாய் திறந்த போதே நீங்க 50 ரூபா கொடுத்துட்டீங்களான்னு கேட்டாங்க அந்த டீச்சர்.  ரம்ஜானுக்காக ஒரு வாரம் ஸ்கூல் பக்கம் போகாததால் அவங்களோட ஏற்பாடு தெரியாமல் இருந்தது.  நாம எப்ப அந்தம்மாகிட்ட கடன் வாங்குனோம்? இடையில அமினீசியா வந்துடுச்சோன்னு???திருதிருன்னு முழிச்சேன்.........

என் சந்தேகம் அவங்களுக்கு புரிஞ்சுடுச்சு போல!!! காரணத்த சொன்னாங்க.

, , ,