3 நாட்களுக்கு முன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க ஸ்டுடீயோக்கு செல்ல நேர்ந்தது. எப்பவும் கொசு விரட்டும் அல்லது யூஸ் ஆகாத கேமராவ தொடச்சு தொடச்சே வெளுக்க வைக்கும் வேலையில் ஈடுபடும் போட்டோக்ராபர் அன்னைக்கு படுபயங்கர பிசி. கூட்டம் வாசல் வரை படர்ந்தது. எல்லாருமே கிராமத்தாளுங்க. சிலர் எங்க ஊர் பாட்டீஸ்.
"இந்த மவராசி வந்தாலே இதே பொழப்புத்தேன். அத மாத்த,இத மாத்தன்னு மனுஷ உயிர வாங்கிட்டுதேன் மறுசோலி பாக்கும்" இதான் என் காதில் முதலில் விழுந்த வாக்கியம். என்னத்துக்கு சொன்னாங்கன்னு தெரியல. ஆனா நம்ம அம்மாவ தான் இப்படி புகழ்றாங்கன்னு மட்டும் தெரிஞ்சது. பரவால்லையே பாட்டீங்க கூட அரசியல்ல பயங்கரமா கலக்க ஆரம்பிச்சுட்டாங்க..... வெயிட் பண்ற நேரத்துக்கு இதையாவது கேட்டுட்டு இருப்போம்னு ஐடியா ;-)
"இந்த மவராசி வந்தாலே இதே பொழப்புத்தேன். அத மாத்த,இத மாத்தன்னு மனுஷ உயிர வாங்கிட்டுதேன் மறுசோலி பாக்கும்" இதான் என் காதில் முதலில் விழுந்த வாக்கியம். என்னத்துக்கு சொன்னாங்கன்னு தெரியல. ஆனா நம்ம அம்மாவ தான் இப்படி புகழ்றாங்கன்னு மட்டும் தெரிஞ்சது. பரவால்லையே பாட்டீங்க கூட அரசியல்ல பயங்கரமா கலக்க ஆரம்பிச்சுட்டாங்க..... வெயிட் பண்ற நேரத்துக்கு இதையாவது கேட்டுட்டு இருப்போம்னு ஐடியா ;-)