maam is disturb me now-u! i am happy how??!!
என்னடா எல்லாரும் கொலவெறின்னு ஒரு தலைப்பையே வச்சு பதிவு போடுறாங்களேன்னு ஒரே ஆராய்ச்சி.. ஆராய்ச்சி முடிவுல தான் தெரிஞ்சது தி ஹிந்து கவர் ஸ்டோரி, ஒரு வாரத்தில் யூடூப்பில் 40 லட்சம் ஹிட்ஸ் (இப்ப 9,415,759 , இளசுகள் முனுமுனுக்கும்(??!!) பாடல், இதுவரைக்கும் தமிழ்பாட்டுக்கு இல்லாத வரவேற்பு..... எல்லாத்துக்கும் காரணம் வொய் திஸ் கொலவெறி??????

முதல் தடவ கேட்டதும் பிடிச்சு போச்சு.  பாட்ட டவுன்லோட் பண்ணி (மொதமொத சொயமா டவுன்லோட் பண்ண பாட்டு இதுதேன் அவ்வ்வ்வ்.....) கேட்டேன். மொத தடவையிலேயே கப்புன்னு மனசுல வரிகள் உக்கார்ந்துச்சு (?!!)

ஆஹா....ஆஹா.... என்னமா பாடியிருக்காரு.... அட...அட,...அட.....

பாட்ட முழுக்க அப்படியே ஒரு பேப்பர்ல எழுதி மனப்பாடம் பண்ணுட்டிருந்தேன். ஒடனே என் அம்மம்மா (பாட்டி) பரிச்சைக்கு படிக்குறீயா?"ன்னு கேக்குறாக. (கொலவெறின்னு வர்ர எடத்துல மட்டும் ஹொல்வெர்டி ;-)

சரின்னு மனப்பாடம் பண்ணி படிச்சா எங்க மாம்ஸ் (தாய் மாமா) இங்க்லீஸ் பாட்டுலாம் படிப்பீயா? நல்லாயிருக்கு"
ஒடனே நான் "ஆமா  தமிழ்ல என்ன பாட்ட எழுதுறானுவ? அதான் இங்க்லீஸ்க்கு மாறிட்டேன் மாம்ஸ்-u......

ஆக மொத்தத்துல படரிலீஸ்க்கு பொறவு எனக்கு எங்க வீட்ல மட்டும் எனக்கு கொலவெறியோட க்ளைமேக்ஸ் சீன் தான்னு  முடிவே பண்ணியாச்சு. அவ்வ்வ்வ்வ்.....

இந்த பாட்டு இங்க்லீஸ் பேசுறவுகள கேவலப்படுத்துற மாதிரி இருக்காம். தமிழ்ல்ல சாகடிக்கிற மாதிரி இருக்காம். இருக்குற இங்கிலிபீஸே மறந்து போய்டுமாம். ச்சச்ச... அப்படியெல்லாம் சொல்லாதீங்கோ.  on behalf of............. ன்னு யாரோ போட்டப்பவே அதுக்கு என்ன அர்த்தம்ன்னு டிக்ஸனரி(டிஸ்கவரி இல்ல), கூகுள் ட்ரான்ஸ்லேட் முழுக்க தேடிட்டிருந்தேன் ;-) ஆனா பாருங்கோ. மொத தடவ அந்த பாட்ட கேட்டப்பவே டிக்ஸ்னரி இல்லாம கப்புன்னு இங்கிலீஸ்லாம் புடிச்சுக்கிட்டேன். என்னமா வரி சேத்துருக்காக????

distance la moon-u moon-u
moon-u  color-u  white-u
white background night-u nigth-u
night-u color-u black-u


இந்த வரிக்கே எல்லாரும் தலமுடிய பிச்சுட்டு அலையலாம். ச்சச்ச... பைத்தியமா இல்ல...
எப்படி எல்லாம் அவங்க யோசிச்சுருந்தா இப்படிலாம் எழுதியிர்ப்பாங்கன்னு யோசிச்சு தலமுடியெல்லாம் போய்டும்னு சொல்றேன். இனி எம்மவன் மூன் என்ன கலர் ன்னு கேட்டா நா முழிப்பேன்???? இப்படியே எல்லா ஜிகேயும் ஒவ்வொரு பாட்டுலையும் கோர்த்தாங்கன்னா அடுத்த வருஷம்லாம் ரைம்ஸ் புத்தகத்துல இவுக பாட்டா தான் வரும். ஏற்கனவே மேல கொடுத்த வரிலாம் நல்லா பாருங்க. அழகான ரைம்ஸ் தானே அது? ஆக சின்ன வயசுல ரைம்ஸ் படிக்காதவங்க இந்த பாட்டு வரப்ரசாதம். இந்த கொலவெறி பாட்டு  மூலமா அந்த குறையை போக்கியிருக்கார் தனுஷ்... இப்படியான நல்லெண்ணத்தில் உருவாக்கப்பட்ட பாட்டையா மொக்கைன்னு சொல்றீக? வொய் திஸ் கொலவெறி??? 

அது யாருப்பா  பொம்பளைய கேவலப்படுத்துற மாதிரி வரி இருக்குன்னு சொன்னது?? அவர் எந்த அளவுக்கு அந்த பொண்ணுனால வேதனப்பட்டிருந்தா 33 தடவ கொலவெறின்னு சொல்லி ஒரு பாட்டு படிப்பாரு. ஒரு பொண்ண கேவலப்படுத்துனா ஒலகம் முழுக்க எல்லா பொண்ணுங்களையும் கேவலப்பத்துறானுவன்னு பீதிய கெளப்புறது? வொய் திஸ் கொலவெறி....

இது ஆங்கிலத்தின் புதிய சகாப்தம். இத பாலோ பண்ணி  பேச ஆரம்பிச்சா பட்டிக்காட்டான் கூட இனி  ஒப்பாரி வைக்கிறதுக்கு பதிலா oh god-u...... she is dead now-u. i am  happy how-u??? ன்னு பாட ஆரம்பிச்சுடுவாங்க. பொறவு என்ன? அப்துல் கலாம் என்ன கனவு காண சொல்றது?  ஒலகம் முழுக்க கொலவெறி இங்க்லீஸ் மொழி பேசி 2020ல இந்தியா எப்படியும் வல்லரசாய்டும்.

this-u song-u for lkg boys-u. I will not do home work-u!!!
ஆக இந்த படம்  ரிலீஸ் ஆவுறதுக்குள்ள பட்டி தொட்டிலாம் இங்க்லீஸ் பரவி குப்பைதொட்டிக்கு தமிழ் போய்டும். ஜெட்டு வேகத்துல சாவுதய்யா டமில்-U :-( :-( :-(

குறிப்பு- இந்த பாட்டை சில காரணங்களுக்காக வெறுத்தாலும்/ பிடிச்சாலும் கூட எப்பவும் குத்து சாங்க் நிலைக்காதுங்குறதுனால லூஸ்ல விடவேண்டிய விசயம் தான். உயிரே படத்துல வரும் பூங்காற்றிலே உன் சுவாசத்தை... எனும் பாட்டை இன்று வரையில் இனிக்கும் நமக்கு ரயில்ல ஏறி பாட்டு பாடுவானுங்களே அது என்ன பாட்டு (மறந்தே போச்சு)... இப்படித்தான். மறந்து போய்டும். சோ கொஞ்ச நாள்ல குப்பைல போகக்கூடிய பாட்டுக்காக மெனக்கெட்டு ஆ ஊ ன்னு கத்த எனக்கு ஜீவன் இல்ல :-(

 இந்த பாட்ட  எதிர்க்கும் முன் டாஸ்மாக், சீரழியும் இளைஞர்கள், சிக்ரெட் பத்தி பேசலாமே? சாரி... உண்ணாவிரதம் இருந்து கலாச்சாரத்த  கட்டி காப்பாத்துலாமே?!!!  ஆந்திரால போய் கார்த்தி  "நிச்சயமாக  தெலுங்கு ரசிகர்களைத்தான் எனக்கு பிடிக்கும்... தெலுங்கு ரசிகர்கள் தான் ஒவ்வொரு சீனுக்கும்,  ஒவ்வொரு பிரேமுக்கும் கை தட்டி,  விசிலடிச்சு ரசிக்கிறாங்க.. ஆனால்  தமிழ் ரசிகர்கள் அப்படி இல்லை.. " சொன்னதுக்கு என்ன வகையான எதிர்ப்பு தெரிவிச்சாங்கன்னு தெரிஞ்சுக்க ஆவல் :-) அப்பறம் ஆர்யாவும் ஜெய்ராமும் எதிர்த்தவர்கள் எங்கே???!! ஹி...ஹி..ஹி.. கோர்த்துவிட்டாச்சு.

 பாட்டு கேட்க

, ,


இஸ்லாத்தை பற்றி பலருக்கும் பல எண்ணங்கள் இருக்கலாம். குர்ஆன் சொல்லும் விஷயங்கள் அறியப்பெறாத காரணத்தால் இஸ்லாம் என்ன சொல்கிறது என தெரியாமல் கூட இருக்கலாம். அப்படிபட்டவர்களுக்காக இஸ்லாம் பழைய காலத்திலேயே (கிட்டதட்ட கிபி 600க்கு முன்பிருந்தே…) இன்றைய புதுமையான விஷயங்களை தன்னகத்தே கொண்டு இன்று வரை தீயமாற்றம் பெறாமல் வளர்ந்துள்ளது என அறியத்தரவே இப்பதிவின் நோக்கம். என் கருத்துக்கள் தவறாய் இருக்கும் பட்சத்தில் சுட்டிகாட்டுங்கள் திருத்திக்கொள்ள வாய்ப்பாய் அமையும்.

பூப்பெய்தும் விழா

பாரம்பரியம்,கலாச்சாரத்தை எடுத்துசொல்ல கூடிய விழாவாய் இருந்த போதிலும் இன்று பலரால் வெறுக்கப்படும் அல்லது விமர்சனப்படுத்தப்படும்  ஒரு விழாவாக இப்போது நிலவுகிறது. இந்த வீட்டில் பருவமடைந்த பெண் இருக்கிறாள் என வரன் தேடுவோர்க்கு எளிதாய் தெரியவேண்டி நடத்தப்படுதாக சொல்லப்படுகிறது.

இது தேவையான ஒன்றா? கலாச்சாரத்தை கட்டி காப்பாத்துறோம் என்ற பேரில் பெண்களை இழிவுபடுத்துவதா?

 புதிதான; அர்த்தம் புரியாத சூழலுக்கு இழுக்கப்பட்டுள்ளோம் என்பதை கூட யோசித்து விடைபெற பல நாட்கள் அவகாசம் தேவைப்படும் அச்சிறுமிக்கு.
சகஜ சூழலுக்கு தன்னை மாற்றும் முன்பே அவளை அலங்கார பொம்மையாய் எல்லோர்க்கும் முன்னிலையில் பிரகடனப்படுத்துவது மன உளைச்சலுக்கு இட்டு செல்லாதா?

என்னை கேட்டால் இப்படியான சூழலில் அவளுக்கு தேவையான ஆறுதல்களும் அதை பற்றிய விழிப்புணர்வும் தருவது தான் அக்காலகட்டத்திற்கு அவளுக்கு தரும் பெரிய பரிசு. இப்போதாவது அக்கம் பக்கம் உள்ளவர்கள் யாரென்று தெரியாமல் இருக்கிறோம். ஆனால் அக்கால கட்டத்தில் ஒருவரை ஒருவர் தெரியாமலோ அல்லது எவ்விதத்தில்லாவது உறவினராக இல்லாமலோ இல்லை. அப்படியிருக்க பருமடைந்த பெண் இந்த வீட்டில் இருப்பாள் என அனைவருக்கும் தெரிந்திருக்கும். பின் ஏன்தான் இந்த நோக்கத்திற்காகதான் நடத்துகிறோம் என்று சப்பைகட்டு கட்டி இந்த தேவையில்லாத சடங்குகள்?  இப்படி ஊர் கூட்டி விஷேஷம் நடத்தப்படுவதால் பலன் என்னவோ மொய் கறக்க நினைக்கும் பெற்றோர்களுக்கும், இன்னும் மாமனார் வீட்ல எவ்வளவு கறக்கலாம் என எந்நாளும் துடித்துக்கொண்டிருக்கும் சிறுமியின் தகப்பனார் வீட்டார்க்கும்  தான். இஸ்லாம் இத்தகைய தேவையற்ற  சடங்குகளை வெறுக்கிறது. இஸ்லாத்தில் சொல்லப்படாத ஒன்றை செய்வதும் புதிதுபுதிதாய்  சம்ப்ரதாய சடங்குகளை புகுத்துவதும் வெறுக்கப்பட்ட செயலாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியது:
மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்படும் அனைத்தும் வழிகேடாகும்.(ஆதார நூல்-புகாரி)
யார் நம்முடைய இந்த மார்க்க விஷயத்தில் அதில் இல்லாத ஒன்றை புதிதாக உறுவாக்குகின்றாரோ அது மறுக்கப்பட்டுவிடும். (ஆதார நூல்: முஸ்லிம்)


திருமண முடிவு
 இன்றைய காலகட்டத்தில் சுயமாய் முடிவெடுக்கும் உரிமை அனைவருக்கும் விரும்பியோ வெறுத்தோ வழங்கப்பட்டுள்ளது. என் வாழ்க்கை… என் கையில்… ஆகையால் நான் தான் தீர்மானிப்பேன் என்ற குரல் சமீப காலமா தான் ஓங்கியிருக்கு.  அதுவும் வலுக்கட்டாயமாய் தான் இந்த உரிமையை மீட்டுள்ளோம். ஆனால் கொஞ்ச வருடங்களுக்கு முன்பு வரை பெண்களிடம் சம்மதம் கேட்பது என்பது எங்காவது படித்த குடும்பத்தில் மட்டுமே நிகழும் விஷயம். “அவளுக்கு என்ன நல்லது கெட்டது தெரியும்? நாம பாத்து எவன கட்டணும்னு சொல்றோமோ அவனுக்கு வாக்கப்பட வேண்டியது தான்”என சொல்லி சொல்லி எத்தனை கனவுகள் வெறும் கனவுகளாகவே இருந்திருக்கும்? எத்தனை பெண்கள் விருப்பமில்லாத அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்கள்?

ஆனால்……………………

விதவைப்பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெறவேண்டும். கன்னி பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - ஆதார நூல்: புகாரி)

பாருங்கள்…. அக்காலத்திலேயே பெண்ணின் திருமண விருப்பத்தை உறுதிபடுத்திய பின்னரே; அவள் இன்னாரை திருமணம் செய்ய வாய் மொழியாக சம்மதம் தெரிவித்த பின்னரே திருமணம் நடத்தப்படவேண்டும் என கட்டளை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் விருப்பமில்லாதவர்களுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவிட்டால் அத்திருமணத்தை ரத்து செய்ய கோரும் உரிமை பெண்ணுக்கு இருக்கிறது.  விருப்பமில்லாத வாழ்க்கை வாழ்ந்தால் உளவியல் ரீதியாக அவள் அனுபவிக்கும் எண்ணற்ற வேதனைகளை,மனக்குழப்பங்களை,தடுமாற்றங்களை அறிந்து அன்றே இத்தகைய சட்டங்கள் கொண்டுவரப்பட்ட ஒரே மதம் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே. கணவன் இறந்து போனால்  மொட்டை அடிச்சுட்டு, வெள்ளை சேலை உடுத்தி, தாலி அறுத்து பொட்டை அழித்து வளையலை உடைத்து, பூவை உருவி…… (முன்பு உடன்கட்டை வேற) ஏற்கனவே மனவேதனையில் இருக்கும் பெண்ணை மீண்டும் மீண்டும் மரண வேதனை கொடுக்கும் சடங்குகளோ சம்ப்ரதாயங்களோ இஸ்லாத்தில் கிடையாது. மேலும் தாலி மெட்டி போன்ற பெண்ணை திருமணமானவள் என்று அடையாளப்படுத்தும் ஒரே காரணத்துக்காக ஏற்படுத்தப்பட்ட அர்த்தமற்ற விஷயங்கள் இல்லை.

சமீபத்தில் கணவன் இறந்த பெண்ணிற்கு நடத்தபட்ட சடங்குகளை பார்க்கையில் சொல்ல முடியாத அளவுக்கு வருத்தம் தொண்டையை அடைத்தது. படத்தில் காட்டுவது போன்று ஏற்கனவே இருக்கும் அலங்காரங்களை அழிக்கவில்லை. வாசலுக்கு கொண்டு வந்து சில விதவை பெண்களின் மூலம் சடங்கு நடத்தப்பட்டது. அழகாய் போட்டு வைத்து,பூ சூடி, கண்ணாடி வளையல்கள் இட்டு வீதியில் அமர வைக்கப்பட்ட அந்த பெண்ணிடம் முகம்பார்க்கும் கண்ணாடி கொடுத்து கடைசியாய் ஒரு முறை பார்த்துக்கொள் என்கிறார்கள். பின் ஒன்றன் பின் ஒன்றாக எல்லா அலங்காரங்களையும் கோர முகத்துடன் அழிக்கப்பட்டது……  இவையனைத்தையும் வீதியில் போவோர் வருவோர் அக்கம்பக்கத்திலுள்ளோர் வேடிக்கை பார்க்கும்படி தான் செய்யப்படுகிறது…. இவையெல்லாம் எதற்கு? இதுக்கு பிறகு உனக்கு வாழ்க்கை இல்லை என சொல்வதற்காகவா?
காலம் மாறிவிட்ட போதிலும் கூட சமூகத்தில் தனக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக விதவை பெண்ணானவள் விருப்பமிருந்தும் மறுமணம் செய்ய தயங்குகிறாள். அல்லது மற்றவர்களால் அவ்வாறு செய்யக்கூடாது என தடுக்கப்படுகிறாள். ஆனால் இஸ்லாத்தில் மறுமணம் செய்ய பெண்ணுக்கு முழு உரிமை உண்டு.  அவளின் விருப்பத்தை/பாதுகாப்பை மறுக்கவோ தடை செய்யவோ எவருக்கும் உரிமை இல்லை.

 வரதட்சணை :-
திருமண சந்தையாய் மாறிவிட்ட இக்கால திருமண நிகழ்ச்சி எல்லாருக்கும் நன்கு தெரியும்.  பெண் வீட்டார் குறிப்பிட்ட தொகையை பேரம் பேசி மாப்பிள்ளையை விலை கொடுத்து வாங்குகின்றனர். அப்படியிருந்தும் கூட  “இன்னும் பணம் வாங்கிட்டு வா” என மறைமுகமாக பல காரியங்களில் ஈடுபட்டு தன் மனைவியை பிறந்த வீட்டுக்கு துரத்துவதும், அவ்வாறு கிடைக்கவில்லை என்றால்  பெண்களை கொடுமைப்படுத்தி சாகும் அளவுக்கு பிரச்சனையை கொண்டு வருவதும் செய்திதாள்களின் மூலமாகவும் அண்டை வீட்டிலோ நம் நெருங்கிய வட்டத்திலோ அடிக்கடி கேள்விபடும் விஷயம். ஆனால் இஸ்லாத்தில் ஆண் தான் திருமணத்திற்கான தொகையை பெண்ணுக்கு பணமோ பொருளோ கொடுக்க வேண்டும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இஸ்லாமிய ஆண் பெண்ணை திருமணம் செய்ய விரும்பினால் அப்பெண்ணிற்கு குறிப்பிட்ட தொகை (மஹர்) கொடுக்க வேண்டும். பெண் வீட்டார் எள்ளளவும் செய்யத்தேவையில்லை. அதுவுமில்லாமல் அத்தொகையை நிர்ணயம் செய்வதற்கும் பெண்களுக்கே உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. என்னவன் எவ்வளவு எனக்கு கொடுக்க வேண்டும் என்பதை நானே தீர்மானிப்பேன். இவ்வளவு மணக்கொடை கேள் என யாரும் சொல்ல அனுமதி இல்லை . மேலும் மணக்கொடையாய் கொடுக்கப்பட்ட பணத்தையோ பொருளையோ முழுவதுமாக அனுபவிக்கும் உரிமையும் பெண்களுக்கு மட்டுமே!

நீங்கள் மணம் செய்து கொண்ட பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள்.  அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனம் விரும்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வோடு புசியுங்கள்-(ஆதார நூல்-அல்குர்ஆன் 4 : 4)

:-)

பாத்தீங்களா? இஸ்லாத்தில் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமையை? மணமகனை தேர்ந்தெடுப்பதும் பெண்கள் தான். திருமணத்தொகை பெறுவதும் பெண்கள்தான். எல்லாவற்றையும் விட பிடித்தமானவரை திருமணம் செய்யும் உரிமை ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ளது. இத்தகைய பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நல்லதொரு சட்டங்கள் போன வருஷமோ முந்துன வருஷமோ ஏற்பட்டதல்ல…. நபி (ஸல்) வாழ்ந்த காலத்திலேயே  நடைமுறைபடுத்தப்பட்டுவிட்டது. இத்தகைய உரிமையெல்லாம் மகளிர் அமைப்புகள் மூலமாகவோ,போராட்டமோ, உண்ணாவிரதோ செய்து பெறப்பட்டதில்லை. 33 சதவீதம் தா என்று இன்றளவும் கெஞ்சிக்கொண்டிருக்கவும் இல்லை.  ஆணுக்கு பெண் எவ்விதத்திலும் குறைந்தவள் இல்லை என நிரூபிக்கும் பல சான்றுகள் திருக்குர்ஆனில் கொட்டி கிடக்கிறது!  என்றோ எங்களுக்கு சுதந்திர காற்று அனுபவிக்கும் உரிமை வழங்கப்பட்டுவிட்டது. இப்ப சொல்லுங்க…. இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்தும் மதமா (மார்க்கமா?)? இஸ்லாம் பெண்களை இழிவுபடுத்தும் மதமா (மார்க்கமா?)? 

இன்னும் அதிகமதிகம் உள்ளது. பதிவு நீள்வதால் இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள பழைமை காலத்திலேயே கடைபிடித்த நவீன விஷயங்களை அடுத்தடுத்த பதிவுகளில் தொடர்கிறேன்.

அனைவருக்கும் ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

, , ,